குழந்தைகள் கண் முன் மனைவியை வெட்டி சமைத்த கொடூர கணவன்

மனம் பதற வைக்கும் கொடூரமான சம்பவம் ஒன்றில், கணவர் ஒருவர், குழந்தகளின் கண் முன்னே தனது மனைவியை கொன்று வெட்டி அண்டாவில் போட்டு கொதிக்க வைத்துள்ளார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 15, 2022, 10:46 AM IST
  • மனம் பதற வைக்கும் கொடூரமான சம்பவம்.
  • தனியார் பள்ளியின் சமையலறையில் உள்ள அண்டாவில் போலீஸார் கண்டெடுத்த சடலம்.
  • சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
குழந்தைகள் கண் முன் மனைவியை வெட்டி சமைத்த கொடூர கணவன் title=

அனைவரின் மனதை பதற செய்யும் ஒரு கொடூரமான சம்பவத்தில், கணவன், தனது ஆறு குழந்தைகள் முன் மனைவியை வெட்டி சமைத்துள்ளார். இந்த சம்பவம் வேறெங்கும் அல்ல பாகிஸ்தானி நடந்துள்ளது. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில், தான் கொடூர செயல் அரங்கேறியுள்ளது. கணவர் தனது மனைவியைக் கொன்று, தனது ஆறு குழந்தைகளுக்கு முன்னால் வெட்டி அண்டா போன்ற பெரிய பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைத்துள்ளார். 

ஊடக அறிக்கை ஒன்றில், புதன் கிழமை நர்கின் என்ற பெண்ணின் சடலத்தை, நகரின் குல்ஷன்-இ-இக்பால் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் சமையலறையில் உள்ள அண்டாவில் போலீஸார் கண்டுபிடித்ததாக கூறப்பட்டுள்ளது. 

கொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் ஆஷிக், பாகிஸ்தானில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்தார். சுமார் எட்டு முதல் ஒன்பது மாதங்களாக பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில், பணியாட்களுக்கான குடியிருப்பில் வசித்து வந்தார். கொடூரமான சம்பவத்தைத் தொடர்ந்து ஆஷிக் தனது மூன்று குழந்தைகளுடன் தப்பி ஓடிய நிலையில், அவரது 15 வயது மகள் போலீசாரை அழைத்து தகவல் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ரிபுதமன் சிங் மாலிக்: 1985 ஏர் இந்தியா விமான தாக்குதல் வழக்கு சந்தேக நபர் படுகொலை

மாவட்ட கிழக்கு மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) அப்துர் ரஹீம் ஷெராசி, இந்த சம்பவம் குறித்து கூறுகையில், மற்ற மூன்று குழந்தைகளும் மீட்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பில் இருப்பதாக தெரிவித்தார் என ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எனிமும் குழந்தைகள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று எஸ்எஸ்பி ஷெராசி கூறினார்.

காவல்துறை, இறந்தவர் உடலை மீட்டு, உடல் கூறாய்வுக்காக ஜின்னா முதுகலை மருத்துவ மையத்திற்கு எடுத்து சென்றதாக அப்துர் ரஹீம் ஷெராசி கூறினார். முதற்கட்ட விசாரணைகள் மற்றும் குழந்தைகளின் வாக்குமூலங்கள் மூலம், கணவர் தனது மனைவியை தலையணையால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவர்கள் முன்னால் பெண்ணின் உடலை வெட்டி அண்டாவில் போட்டு கொதிக்க வைத்தது தெரிய வந்துள்ளது என காவல் துறை அதிகாரி கூறினார். அந்த பெண்ணின் கால்கள் அவரது உடலில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தது என்றும் காவல் துறை அதிகாரி கூறினார்.

சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், கணவன் தனது மனைவியை தகாத உறவில் ஈடுபட வற்புறுத்தியதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் கொலை செய்ததாகவும் ஊகிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | Rajapaksa in Singapore: நாடு நாடாக தப்பித்து செல்லும் அதிபர் கோத்தபய ராஜபக்சே

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News