தன் செந்த குழந்தைகளை தீ வைத்த கொன்ற தந்தை!

ஜப்பான் நாட்டில் ஐந்து குழந்தைகள் மற்றும் அவரது தாய் என 6 பேர் தீ-க்கு பலியாகி சடலமாக மீட்கப்பட்டனர்.

Last Updated : Oct 6, 2017, 09:14 AM IST
தன் செந்த குழந்தைகளை தீ வைத்த கொன்ற தந்தை! title=

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் ஐந்து குழந்தைகள் மற்றும் அவரது தாய் என 6 பேர் தீ-க்கு பலியாகி சடலமாக மீட்கப்பட்டனர்.

டோக்கியோவில் இருந்து வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹிட்டாச்சி நகரில், அபார்ட்மெண்டில் ஒன்றில் விபத்துக்குள்ளானவர்களில் ஐந்து சடலங்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

உயிருக்கு ஆபாத்தான நிலையில் குழந்தை ஒன்று இவர்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவசர சிகிச்சைப் பெற்ற அக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது.

உள்ளூர் ஊடகங்கள் அறிக்கையின்படி இறந்த குழந்தைகள் 3 முதல் 11 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 30 வயது மதிக்கத்தக்க ஜிஜியை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் அக்குழந்தைகளின் தந்தை எனவும். வேண்டுமென்றே அவரை தன் குடும்ப நபர்களை தீக்கு பலியாக்கியுள்ளார் எனவும் தெரிகிறது.

மேலும் காவல்துறை விசாரணையில் இவர் முன்னுக்குபின் புரம்பான பதில்களை கூறியுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Trending News