இன்று முதல் பெரிய மாற்றங்கள்: ATM, டெபிட், கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளில் மாற்றம்

வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஹோம் பேங்க் ஏடிஎம்களில் இருந்து ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு தகுதி பெறுவார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 1, 2021, 09:06 AM IST
இன்று முதல் பெரிய மாற்றங்கள்: ATM, டெபிட், கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளில் மாற்றம் title=

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் பரிமாற்றக் கட்டணத்தை உயர்த்தி, தனியார் மற்றும் பொது வங்கிகளுக்கு ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணங்களையும், டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்களையும் உயர்த்த அனுமதித்துள்ளது.

அதன்படி இன்று முதல், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவைத் தொடர்ந்து, ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின்களில் (ATM), வங்கிகள் வசூலிக்கக்கூடிய பரிமாற்றக் கட்டணம் ரூ .2 அதிகரிக்கும். ஜூன் மாதத்தில், மத்திய வங்கி பரிமாற்றக் கட்டணத்தை ரூ .15 லிருந்து ரூ .17 ஆக உயர்த்தியது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ .5 முதல் ரூ .6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ALSO READ | Cabinet decisions: வங்கி வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி! வங்கி முழுகினாலும் பணத்துக்கு கேரண்டி!

கிரெடிட் கார்டு (Debit Card) அல்லது டெபிட் கார்டுகள் (Credit Card) மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டணம் வங்கிகளால் வசூலிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களின் படி, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஹோம் பேங்க் ஏடிஎம்களில் இருந்து ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு தகுதி பெறுவார்கள்.

மேலும், பிற வங்கிகளின் ஏடிஎம்களிலிருந்து வாடிக்கையாளர்கள் இலவச பரிவர்த்தனைகளை கோரலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதில் மெட்ரோக்களில் மூன்று பண பரிவர்த்தனைகளும், மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து பரிவர்த்தனைகளும் அடங்கும்.

ஜூன் 2019 இல் ரிசர்வ் வங்கி அமைத்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. ஏடிஎம் கட்டணங்கள் முழுவதையும் மறுபரிசீலனை செய்ய இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது. ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்ற கட்டமைப்பில் இதில் ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்தப்பட்டது.

ALSO READ | இந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்: முழு விவரம் இதோ

ஏடிஎம் வரிசைப்படுத்தல் செலவு மற்றும் வங்கிகளுக்கு ஏற்படும் ஏடிஎம் பராமரிப்பிற்கான செலவுகள் காரணமாக இந்த கட்டணங்கள் உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி கூறியது. மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் 115,605 ஆன்சைட் ஏடிஎம்கள் மற்றும் 97,970 ஆஃப்-சைட் டெல்லர் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு வங்கிகளால் வழங்கப்பட்ட 900 மில்லியன் டெபிட் கார்டுகள் உள்ளன என்று செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) சமீபத்தில் ஜூலை தொடக்கத்தில் தனது ஏடிஎம்கள் மற்றும் வங்கி கிளைகளிலிருந்து பணத்தை எடுப்பதற்கான சேவை கட்டணங்களை திருத்தியது. எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முதல் 10 காசோலை லீஃப்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இந்த வரம்பைத் தாண்டிய காசோலைகளுக்கு 2021 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்த கட்டணங்களுக்கு உட்பட்டது.

ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் கட்டணம்
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) பண பரிவர்த்தனைகள், ஏடிஎம் பரிமாற்றம் மற்றும் காசோலை கட்டணங்கள் ஆகியவற்றின் திருத்தப்பட்ட வரம்புகள் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள், சம்பளக் கணக்குகள் உட்பட சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும். இது இன்று முதல் நடைமுறைக்கு வரும்.

ALSO READ | SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: புதிய அம்சம் அறிமுகம், நன்மைகள் ஏராளம்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News