Budget 2024: மொத்த டார்கெட் இந்த ஒரு துறையின் மீது தான்.. என்ன எதிர்பார்க்கலாம்

Budget 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2024 அன்று தாக்கல் செய்ய உள்ளார். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கடைசி முக்கிய பொருளாதார ஆவணமாக இது இருக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 30, 2024, 12:34 PM IST
  • வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம்.
  • விரயத்தை குறைக்க கிடங்குகளை மேம்படுத்த வேண்டும்: சிஐஐ.
  • பெண்களின் பங்கீட்டை அதிகரிக்க நாரி-சக்தி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும்.
Budget 2024: மொத்த டார்கெட் இந்த ஒரு துறையின் மீது தான்.. என்ன எதிர்பார்க்கலாம் title=

பட்ஜெட் 2024: பிப்ரவரி 1, 2024 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இடம் பெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் கிராமப் பொருளாதாரத்தை உயர்த்த, இடைக்கால பட்ஜெட்டில் விவசாயத் துறையின் முக்கிய திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை அரசு கணிசமாக உயர்த்தி, கடன் வசதிகளை அதிகரிக்க முடியும். ஏனெனில் விவசாயத் துறையின் வளர்ச்சி 2023-24 ஆம் ஆண்டில் 1.8 சதவீதமாகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த 4 சதவீதமாக இருந்தது.

மேலும் படிக்க | Budget 2024: சேமிப்பு கணக்கு வட்டி வருமானத்தின் மீதான வரி விலக்கு அதிகரிக்கலாம்!

கிசான் சம்மன் நிதி உதவித் தொகை அதிகரிக்கலாம்:
2019 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட்டில், பிரதமர்-கிசான் சம்மன் நிதியை அரசாங்கம் அறிவித்தது, இதன் பிறகு தற்போது இதன் கீழ் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. எனவே தற்போது தேர்தல் ஆண்டில், வரும் பட்ஜெட்டில், அரசு உதவி தொகையை உயர்த்தி அறிவிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை 50 சதவீதம் அதிகரித்து ஆண்டுக்கு 9,000 ரூபாயாக அளிக்க அறிவிப்புகள் வெளியிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனக் கணிப்புகள் உள்ளது. இந்த ஒரு அறிவிப்பு மூலம் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சுமார் 60 சதவீத கிராமப்புற குடும்பங்களை ஈர்க்க முடியும். இதேபோல் விவாசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதிய நிறைவேற்றும் விதிமாகவும் இந்த அறிவிப்பு இருக்கும்.

மேலும், அடுத்த நிதியாண்டில் விவசாயக் கடன் இலக்கை ரூ.22-25 லட்சம் கோடியாக கணிசமாக உயர்த்தி அரசு அறிவிக்கலாம். இந்த நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம், தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் நிறுவனக் கடன் கிடைப்பதை உறுதிசெய்ய முடியும். நடப்பு நிதியாண்டில் விவசாயக் கடனை ரூ.20 லட்சம் கோடியாக வைத்திருக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், டிசம்பர் 2023க்குள் விவசாயக் கடன் இலக்கான ரூ.20 லட்சம் கோடியில் சுமார் 82 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.

விரயத்தை குறைக்க கிடங்குகளை மேம்படுத்த வேண்டும்: சிஐஐ
தொழில்துறை அமைப்பின் சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி கூறுகையில், விவசாயம் மற்றும் கிராமப்புறத் துறைகளுக்கு இடைக்கால பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைத் தொடர வேண்டும். "விவசாயத் துறையில், விரயத்தை குறைக்க, கிடங்குகளை ஊக்குவிக்க வேண்டும். மின்னணு பேரம் பேசக்கூடிய கிடங்கு ரசீதுகளின் (eNWR) கவரேஜ் அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் அவற்றை நிதி, வர்த்தகம் மற்றும் வர்த்தக தீர்வுக்கு பயன்படுத்த அனுமதித்துள்ளோம். கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது." விவசாயிகளுக்கு நேரடியாக உர மானியத்தை பணப் பரிமாற்றம் முறையில் வழங்குவதை நோக்கி நகர்வதையும் தொழில் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நாரி-சக்தி திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு:
இந்தப் பட்ஜெட்டல் பெண் விவசாயிகளுக்கு PM-KISAN இன் கீழ் ரொக்க மானியத்தை 12,000 ரூபாயாக இரட்டிப்பாக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. மொத்த விவசாயிகளில் 60 சதவிகிதம் பெண்களாக இருந்தாலும், அவர்களில் 13 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் தான் சொந்தமாக நிலத்தை வைத்திருக்கிறார்கள் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களின் பங்கீட்டை அதிகரிக்க நாரி-சக்தி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Budget 2024: பட்ஜெட்டில் எதிரொலிக்கப்போகும் இந்தியாவின் மொத்த கடன்! வெளியான அதிர்ச்சி தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News