#Cauvery: தி.மு.க சார்பில் அனைத்து கட்சி கூட்டம்!

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சிகளுடன் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் துவங்கியது..! 

Last Updated : Apr 6, 2018, 11:02 AM IST
#Cauvery: தி.மு.க சார்பில் அனைத்து கட்சி கூட்டம்!  title=

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இதுவரை இல்லாத அளவிற்கு முழு அடைப்பு போராட்டம் 100% வெற்றி அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். போராட்டத்தை முன்னெடுத்து செல்வது குறித்து இன்று ஆலோசனை என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தி.மு.க தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னையில் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. காவிரி விவகாரத்தில் அடுத்த நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.

Trending News