தாயில்லா பிள்ளைகளாகிய எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்: தேர்தல் பரப்புரையில் ஆர்.பி.உதயகுமார் உருக்கம்

சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொண்டிருக்கும் தமிழகத்தில் வாக்கு சேகரிப்பும் தேர்தல் பரப்புரைகளும் முழு வீச்சில் நடந்துவருகின்றன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் பல தினுசுகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 30, 2021, 12:50 PM IST
  • தமிழகத்தில் வாக்கு சேகரிப்பும் தேர்தல் பரப்புரைகளும் முழு வீச்சில் நடந்துவருகின்றன.
  • மகளுடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
  • அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மக்களுக்கு மத்தியில் பல தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டார்.
தாயில்லா பிள்ளைகளாகிய எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்: தேர்தல் பரப்புரையில்  ஆர்.பி.உதயகுமார் உருக்கம் title=

சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொண்டிருக்கும் தமிழகத்தில் வாக்கு சேகரிப்பும் தேர்தல் பரப்புரைகளும் முழு வீச்சில் நடந்துவருகின்றன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் பல தினுசுகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர். 

ஆளும் கட்சியான அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் வாக்காளர்களை கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கைகள் மூலமும், வாக்குறுதிகள் மூலமும் தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சித்து வருகின்றன.

திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் (Assembly Seat) போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தனது தொகுதியில் இருக்கும் பள்ளக்காபட்டி, குதிரைச்சாரிகுளம், கீழ உரப்பனூர், சித்தாலை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மெற்கொண்ட அவர், அங்குள்ள மக்களிடையே கலந்துரையாடி தனது கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடன் அவரது மகள் பிரியதர்ஷினியும் உடன் சென்று தனது தந்தைக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பல இடங்களில் வண்டியை நிறுத்தி மக்களுடன் உரையாற்றி அவர்களது குறைகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். 

ALSO READ: தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: தொண்டர்களிடையே உற்சாகம்

இந்நிலையில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பல தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டார். இதன் காரணமாக அவர் மக்கள் மத்தியில் உருக்கமாக பேசி வாக்கு சேகரித்தார். 

“ஜெயலலிதா (J Jayalalitha) இல்லாமல் நாங்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. நாங்கள் என்ன தவறு செய்தோம், மக்களுக்காக உழைக்க வாய்ப்பை கூட கேட்க விடாமல் எங்களை பாடாய் படுத்துகின்றனர். இதுவரை தூங்கிக்கொண்டு இருந்தவர்கள், ஒளிந்து இருந்தவர்கள் என அனைத்து தீய சக்திகளும் தேர்தல் காரணமாக இப்போது நடமாடி வருகிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் அவர்களை பராசக்தியாக அழித்து ஒழித்திருப்பார். தாயில்லா பிள்ளைகளாகிய எங்களை கைவிட்டுவிடாமல் தாயாக இருந்து எங்களை காக்க வேண்டும்.” என்று அவர் மக்களிடையே உருக்கமாக உரையாற்றினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) அவர்களின் தாயைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசாவைப் பற்றியும் அவர் கூறினார்.  “பல தீய சக்திகள் முதல்வரது தாயின் கற்பை பற்றி பேசி அவரை கண்கலங்க வைத்துள்ளனர். தேர்தலுக்காக திமுக தரம் தாழ்ந்து நடந்துகொள்கிறது. வாக்குகளை பெறுவதற்காக, நமது பண்பாட்டை இழந்து மரபுகளை மீறி திமுக-வினர் விமர்சனம் செய்து வருகிறார்கள். 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி திட்டங்களை முதல்வர் 4 ஆண்டுகளில் செய்துள்ளார்” என்று மேலும் உருக்கமாக பேசினார் ஆர்.பி. உதயகுமார்.

ALSO READ: TN Election 2021: பிஜேபி வேட்பாளர் குஷ்பு சுந்தருடன் சிறப்பு நேர்காணல்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News