சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் ஆயுர்வேத மூலிகை இலை

நீரிழிவு அறிகுறிகள்: நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், அத்தி இலைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அத்திப்பழ இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 20, 2022, 10:08 AM IST
  • சர்க்கரை நோய் சிகிச்சை
  • நீரிழிவு அறிகுறிகள்
  • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வீட்டு வைத்தியம்
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் ஆயுர்வேத மூலிகை இலை title=

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வீட்டு வைத்தியம்: நீரிழிவு நோயானது ஒரு போதும் வேரிலிருந்தே ஒழிக்க முடியாத ஒரு பிரச்சனையாகும். இதில், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதுதான் ஒரே தீர்வாகும். மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், ஏராளமான மக்கள் நீரிழிவு உள்ளிட்ட பிற தீவிர நோய்களுக்கு பலியாகின்றனர். ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவர் நீண்ட நேரம் பசியுடன் இருக்கக் கூடாது. இது தவிர, மாவுச்சத்து இல்லாத உணவை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் இனிப்பு பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் அத்தி இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலமும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது நீரிழிவு நோயில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன?
டைப் 1 நீரிழிவு நோயின் அறிகுறிகள் விரைவாகக் காணப்படுகின்றன, அதே சமயம் டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறிகள் மிகக் குறைவே. எனவே நீரிழிவு டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்களுக்கு மங்கலான பார்வை, எரிச்சல், தோல் நோய்த்தொற்றுகள், காயம் ஆறுவதில் தாமதம், அடிக்கடி கழிப்பறைக்குச் செல்வது, அதிக தாகம் எடுப்பது, எடை அதிகரிப்பு அல்லது குறைதல், அதிக பசி மற்றும் சோர்வு போன்ற உணர்வுகள் ஏற்படலாம்.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை 

நீரிழிவு வைத்தியம்

அத்தி இலைகள்
உங்களுக்கு நீரிழிவு பிரச்சனை இருந்தால், அத்தி இலைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் அத்தி இலைகளை மென்று சாப்பிடலாம். இது தவிர, அத்தி இலைகளை மெல்ல விரும்பவில்லை என்றால், அவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். அத்தி இலைகள் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இதனால், உடலின் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

நாவல் பழம்
சர்க்கரை நோய்க்கும் நாவல் பழத்தின் விதைகள் நன்மை பயக்கும். முதலில் நாவல் பழத்தின் விதைகளை காயவைத்து அரைத்து, அதன் பின் பொடி செய்து கொள்ளவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியை தண்ணீரில் மிக்ஸ் செய்து குடித்து வாருங்கள். இதனால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News