ஒருவர் சாப்பிட்ட உணவை மற்றொருவர் சாப்பிட்டால் இத்தனை நோய்கள் பரவுமா? பகீர் தகவல்!!

Side Effects of Sharing Food: பல சமயங்களில் நாம் வீட்டிலோ அல்லது வெளியிலோ சாப்பிட்ட பிறகு மீதம் இருக்கும் உணவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் இந்த பழக்கம் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 24, 2024, 12:19 PM IST
  • பிறர் உண்ட உணவை உட்கொள்வதால் எந்தெந்த நோய்கள் பரவும்?
  • இவற்றால் ஏற்படக்கூடும் ஆபத்துகள் என்ன?
  • இவற்றை பற்றி மருத்துவர் கூறும் விவரங்கள் இதோ.
ஒருவர் சாப்பிட்ட உணவை மற்றொருவர் சாப்பிட்டால் இத்தனை நோய்கள் பரவுமா? பகீர் தகவல்!! title=

Side Effects of Sharing Food: பல நேரங்களில் பலர் ஒரே தட்டில் சாப்பிடுவதையும், ஒருவர் சாப்பிட்ட மிச்சத்தை சாப்பிடுவதையும் பார்க்கிறோம். இது ஒரு வகையில் பாசத்தின் வெளிப்பாடாகக்கூட பார்க்கபடுகின்றது. ஆனால், இந்த பாசம் ஆபத்தாகலாம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பிறர் உண்ட உணவை உண்பது, உடல் நலத்திற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும். ஒருவர் சாப்பிட்ட உணவவை மற்றொருவர் சாப்பிடுவதால், பல வித நோய்கள் பரவக்கூடும். 

பிறர் உண்ட உணவை உட்கொள்வதால் எந்தெந்த நோய்கள் பரவும்? இவற்றால் ஏற்படக்கூடும் ஆபத்துகள் என்ன? இவற்றை பற்றி குருகிராமில் உள்ள மேரிங்கோ ஆசியா மருத்துவமனையின் க்ரிடிக்கல் கேர் பிரிவின் ஆலோசகர் டாக்டர் ரிமி டே விளக்குகிறார். அவர் அளித்த விளக்கத்தை பற்றி இங்கே காணலாம். 

பல சமயங்களில் நாம் வீட்டிலோ அல்லது வெளியிலோ சாப்பிட்ட பிறகு மீதம் இருக்கும் உணவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் இந்த பழக்கம் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று டாக்டர் கூறுகிறார். எச்சில் உணவை உண்பதால் பல நோய்கள் பரவக்கூடும். அதை தவிர்க்க நாம் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். மற்றவர்கள் சாப்பிட்ட உணவை சாப்பிடுவதால் எந்தெந்த நோய்கள் பரவும்? அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம்? இவற்றை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். 

1. டைபாய்டு (Typhoid):

டைபாய்டு ஒரு ஆபத்தான நோயாகும். இது பிறர் உண்ட உணவை உண்பதால் பரவுகிறது. இந்த நோய்க்கு காரணம் சால்மோனெல்லா டைஃபி என்னும் பாக்டீரியா. அதிக காய்ச்சல், தலைவலி, பலவீனம் மற்றும் வயிற்று வலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். டைபாய்டு வராமல் இருக்க சுத்தமான நீரைக் குடித்து, உணவில் தூய்மையைக் கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகும். 

2. ஹெபடைடிஸ் ஏ (Hepatitis A)

ஹெபடைடிஸ் ஏ என்பது ஒரு வைரஸ் தொற்று. இது பிறர் உண்ட உணவை உண்பதாலும் பரவுகிறது. இந்த நோய் ஏற்பட்டால், கல்லீரலில் வீக்கம் ஏற்படுகின்றது. இது மஞ்சள் காமாலை, பலவீனம், காய்ச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஹெபடைடிஸ் ஏ ஏற்படாமல் தவிர்க்க, எப்போதும் சுத்தமாக இருப்பது அவசியம். பிறர் எச்சில் செய்து குடித்த நீரையோ, பிறர் சாப்பிட்ட உணவையோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

மேலும் படிக்க | கொழுப்பு கரைய, எடை குறைய, இந்த காலை உணவுகள் கைகொடுக்கும்: ட்ரை பண்ணி பாருங்க

3 வயிற்றுப்போக்கு (Diarrhea):

பிறரது எச்சில் பட்ட உணவை உட்கொள்வதால், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று தொற்று ஆகியவையும் ஏற்படலாம். இதனால் தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தொற்று அசுத்தமான உணவை உட்கொள்வதாலும், தொற்று உள்ள நபர் சாப்பிட்ட உணவை உட்கொள்வதாலும் பரவக்கூடும். இந்த நோய்களைத் தவிர்க்க, எப்போதும் புதிய மற்றும் சுத்தமான உணவை உண்ண வேண்டும். 

4. ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் (Herpes Simplex Virus):

HSV எனப்படும் இது ஒரு வைரஸ் நோயாகும். இது அசுத்தமான, அல்லது இந்த தொற்று உள்ளவர்கள் சாப்பிட்ட உணவை சாப்பிடுவதன் மூலம் பரவுகிறது. இந்த நோய் பொதுவாக வாய் அல்லது உதடுகளில் காயங்கள் அல்லது கொப்புளங்கள் வடிவில் தோன்றும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் சேர்ந்து உணவை பகிர்ந்து சாப்பிடுவதால் ஏற்படுகின்றது. இதைத் தவிர்க்க, யாருடனும் சேர்ந்து சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. 

5. நோரோவைரஸ் (Norovirus):

நோரோவைரஸ் என்பது அதிகம் பரவும், பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். இது பாதிக்கப்பட்ட நபர் உட்கொண்ட உணவை உண்பதால் எளிதாக பரபவும். வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்பு ஆகியவை இதற்கான அறிகுறிகளாக உள்ளன. இந்த வைரஸ் சுகாதாரமர்ற இடம் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்வதால் பரவுகிறது.

முடிந்த வரை ஒருவர் சாப்பிட்ட உணவை சாப்பிடாமல் இருப்பதே நல்லதாகும். நாம் உணவை பகிர்ந்துகொள்ளும் நபரின் உடலில் ஏதாவது பிரச்சனை உள்ளதாய் என்பதை நாம் கண்டறிவது கடினம். அந்த நிலையில், உணவை பகிர்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இந்த பழக்கம் பல கொடிய நோய்கள் பரவ காரணமாக இருக்கின்றது. உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்! நோய்கள் வராமல் இருக்க, அடிப்படை சுகாதாரத்தை கடைபிடிப்பதும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிகைகளை மேற்கொள்வதும் மிக முக்கியமாகும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் எடையை உடனே குறைக்க உதவும் ஆயுர்வேத மேஜிக்: உங்க கிச்சனிலேயே இருக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News