25 வயது பெண்ணை மணந்து வைரலான 45 வயது விவசாயி தற்கொலை!

5 மாதங்களுக்கு முன்பு 25 வயது பெண்ணை திருமணம் செய்து நட்டீசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட 45 வயது வியசாயி தற்கொலை செய்துகொண்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 30, 2022, 11:57 AM IST
  • 25 வயது பெண்ணை திருமணம் செய்து நட்டீசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட 45 வயது வியசாயி தற்கொலை.
  • மனைவியுடன் தகராறு, மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சங்கரண்ணா.
25 வயது பெண்ணை மணந்து வைரலான 45 வயது விவசாயி தற்கொலை! title=

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகா ஹிலியூர்துர்கா அருகே அமைந்துள்ள சவுடனகுப்பே கிராமத்தை சேர்ந்தவர் சங்கரண்ணா(வயது45). இவருக்கு 2021 ஆம் ஆண்டு மேகனா (வயது 25) என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. 
மனைவி மேக்னாவிற்கு முன்னதாக வேறு திருமணம் நடந்து, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக தெரிகிறது.

அதன் பின்னர் மேகனா சங்கரண்ணாவை சந்தித்துள்ளார். இருவரும் காதலில் விழுந்துள்ளனர். பெற்றோர், உறவினர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடதக்கது.

Shankaranna Meghna

மணமகன் சங்கரண்ணா பார்ப்பதற்கு வயதான தோற்றம் உடையவராக இருந்ததன் காரணமாக, அவருக்கு 60 வயது என்றும், ஆனால் அவர் 25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டது. சங்கரண்ணா, மேகனா திருமண புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பல்வேறு தரப்பிலான கருத்துகளை பெற்றன. 

இருப்பினும் இருவரும் இக்கருத்துகளை பொருட்படுத்தாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். சங்கரண்ணாவும் - மேகனாவும் டிக்-டாக் வளைதளத்தில் வீடியோ வெளியிட்டு சில நாட்களுக்கு பிரபலமாக வலம் வந்தனர்.

இந்நிலையில் மேகனா 4 மாதங்கள் கர்பமாக இருத்ததாக கூறப்படுகிறது. இதர்கிடையே திருமணத்திற்கு பின்னர் சங்கரண்ணாவின் தாயாருக்கும், மேகனாவுக்கும் அடிக்கடி சண்டைகள் மூண்டுள்ளன. 

இருவருக்கும் தகராறு நீடித்ததன் காரணமாக மேகனா தனிக்குடுத்தனம் வேண்டும் என்று சங்கரண்ணாவிடம் கேட்டு வாக்குவாதத்தில்  ஈடுபட்டுள்ளார். ஆனால் சங்கரண்ணா தன் தாயை தனியாகவிட்டுவிட்டு வரமுடியாது என மறுத்துள்ளார்.

Shankaranna Meghna

மேலும் படிக்க | முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு..பாஜக நிர்வாகி கைது

இந்த வாக்குவாதம் பிறகு இருவருக்கிடையே சண்டையாக நீண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரு நாட்களுக்கு முன்னர், கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக மனம் உடைந்து காணப்பட்ட சங்கரண்ணா தற்கொலை நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியேறி வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் சங்கரண்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சங்கரண்ணாவின் தற்கொலைக்கு மேகனா தான் காரணம் என்றும், சங்கரண்ணாவை மேகனா தற்கொலைக்கு தூண்டியதாகவும் ஹிலியூர்துர்கா காவல் நிலையத்தில் சங்கரண்ணாவின் தாய் புகார் அளித்து உள்ளார். 

அவரது புகாரின் பேரில் மேகனாவை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Shankaranna Meghna

மேலும் படிக்க | மோஜ் பார்த்த தங்கை : அண்ணன் கண்டித்ததால் தற்கொலை..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News