மும்பையில் தாய் மகள் இருவரையும் பலிவாங்கிய தீ விபத்து!

மும்பை அழகு நிலையம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் தாய் மற்றும் மகள் இருவரும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.   

Last Updated : Feb 15, 2018, 11:30 AM IST
மும்பையில் தாய் மகள் இருவரையும் பலிவாங்கிய தீ விபத்து! title=

மும்பை அழகு நிலையம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் தாய் மற்றும் மகள் இருவரும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

மும்பையில் உள்ள ஐயோலி செக்டார் -3 நவி என்ற இடத்தின் அருகில் அமைந்துள்ள பிரபல அழகு நிலையம் ஒன்றில் இன்று காலை 4-மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், அந்த கடையில் இருந்த  தாய் மற்றும் மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திருக்கு விரைந்து வந்த விரைந்து வந்த மூன்று தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மற்ற பகுதிக்கும் தீ பரவுகிறது. இந்த தீ விபத்தில் மூன்று டெண்டர்கள் கருகி நாசமாகியுள்ளனர்.

இந்த தீ விபத்திற்கான காரணம் இது வரை தெரியவில்லை. மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News