கர்நாடகாவில் கட்டிடம் இடிந்து விபத்து: மக்கள் அச்சம்!

கர்நாடகாவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Last Updated : Feb 15, 2018, 05:49 PM IST
கர்நாடகாவில் கட்டிடம் இடிந்து விபத்து: மக்கள் அச்சம்! title=

கர்நாடகாவின் கசவனஹள்ளி சாராபூர் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. 

கட்டிடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இடிபாடுகளில் இருந்து இதுவரை 6 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்திற்கான காரணம் இது வரை தெரியவில்லை. மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News