வெறும் நான்கு நாட்களில் 80 மாவட்டங்களுக்கு பரவிய கொரோனா வைரஸ்...

இந்தியாவில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் கொரோனா குறைந்தது 80 மாவட்டங்களுக்கு பரவியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Apr 13, 2020, 06:14 AM IST
  • கடந்த 24 மணி நேரத்தில் 909 புதிய வழக்குகள் மற்றும் குறைந்தது 34 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெறும் நான்கு நாட்களில் 80 மாவட்டங்களுக்கு பரவிய கொரோனா வைரஸ்... title=

இந்தியாவில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் கொரோனா குறைந்தது 80 மாவட்டங்களுக்கு பரவியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 8,447-ஆக உயர்ந்து, இறப்பு எண்ணிக்கை 273-ஐ எட்டியுள்ள நிலையில், வெறும் நான்கு நாட்களில் கொரோனா குறைந்தது 80 மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் 364 மாவட்டங்களில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 6-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் 284 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் ஏப்ரல் 2-ஆம் தேதி, நாட்டில் 211 மாவட்டங்களில் மட்டமே கொரோனா நோய்த்தொற்றுகள் இருந்ததாக அரசு அறிக்கை தெரிவிக்கிறது.

மார்ச் 29 அன்று, 160 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றுகள் கண்டறியப்பட்டன. மார்ச் 22 அன்று, நாட்டில் 75 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 909 புதிய வழக்குகள் மற்றும் குறைந்தது 34 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சின் இணைச் செயலாளர் லவ் அகர்வால், புதுடெல்லியில் செய்தியாளர் சந்திப்பில், மார்ச் 29 அன்று நாட்டில் 979 நேர்மறையான வழக்குகள் இருந்தது, இது 8,447-ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 764 நோயாளிகள் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர், அவர்களில் 74 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சீனா, ஜப்பான் மற்றும் கொரியாவில் கொரோனா வழக்குகள் மீண்டும் எழுந்திருப்பது கவலைக்குரியது என்றும் சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியது.

Trending News