Arvind Kejriwal : ஜெயிலில் இருந்து கெஜ்ரிவால் போட்ட முதல் உத்தரவு... என்ன தெரியுமா?

Arvind Kejriwal First Order From Jail : அமலாக்கத்துறை சிறையில் இருந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் குறிப்பின் மூலம் முதல் உத்தரவை அமைச்சருக்கு அனுப்பி உள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 24, 2024, 11:32 AM IST
  • மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது.
  • அரவிந்த் கெஜ்ரிவால் வரும் மார்ச் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருப்பார்.
  • சிறை சென்றாலும் அவர் டெல்லி முதலமைச்சராக தொடர்கிறார்.
Arvind Kejriwal : ஜெயிலில் இருந்து கெஜ்ரிவால் போட்ட முதல் உத்தரவு... என்ன தெரியுமா? title=

Delhi CM Arvind Kejriwal First Order From Jail : டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் மார்ச் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்ட நிலையில், தற்போது அவர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தாலும் முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யாத நிலையில், தற்போது அங்கிருந்தே தனது அரசுப் பணியையும் மேற்கொண்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக, முதல்முறையாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். டெல்லியின் குடிநீர் விநியோகம் குறித்து அமைச்சர் ஆதிஷிக்கு அனுப்பிய குறிப்பின் மூலம் உத்தரவை பிறப்பித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் ஆதிஷிக்கு அனுப்பிய குறிப்பை பொதுவெளியில் வாசித்தார். மேலும், முதன்முதலில் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய அந்த குறிப்பை படிக்கும்போது கண்ணீர் வந்துவிட்டது என உணர்ச்சி பெருக்கில் கூறினார். 

பணிகள் தடைப்படாது...

செய்தியாளர்களை சந்தித்த ஆதிஷி,"அரவிந்த் எனக்கு கடிதம் எழுதி, அதில் ஒரு உத்தரவையும் பிறப்பித்துள்ளார். அதை வாசிக்கும் போது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. எனக்கு ஒரே சிந்தனையாக உள்ளது யார் இந்த மனிதன், சிறையில் இருந்துகொண்டும், டெல்லி குடிமக்களின் தண்ணீர் மற்றும் கழிவுநீர் பிரச்னை பிரச்னை குறித்து யோசிக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவாலால் மட்டுமே இப்படி செய்ய முடியும், ஏனென்றால் அவர் 2 கோடி டெல்லி மக்களின் குடும்ப உறுப்பினராகவே தன்னை கருதிக்கொள்கிறார்.

மேலும் படிக்க | ED பிடியில் டெல்லி முதல்வர்: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

நான் பாஜகவுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன், நீங்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து சிறையில் அடைக்கலாம் ஆனால், டெல்லி மக்கள் மீதான அவரின் அன்பை உங்களால் சிறையில் அடைக்கவே முடியும். அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தாலும், அரசுப் பணி எதுவும் தடைப்படாது" என்றார். அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய அந்த கடிதத்தை அவர் பொதுவெளியில் வாசித்தார். 

அரவிந்த் கெஜ்ரிவாலின் கடிதம்

அதில்,"டெல்லியின் சில பகுதிகள் தண்ணீர் விநியோகம் மற்றும் சாக்கடை பிரச்சனைகளை எதிர்கொள்வதாக எனது கவனத்திற்கு வந்தது. இது கவலை அளிக்கிறது. நான் சிறையில் இருப்பதால் மக்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்கக்கூடாது. கோடை காலம் வந்துவிட்டது, எனவே தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளில் போதுமான டேங்கர்களை வழங்க வேண்டும். 

மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில், தலைமைச் செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு வழிகாட்டுங்கள். மக்கள் தங்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். தேவைப்பட்டால் துணைநிலை ஆளுநரின் உதவியை நாடவும். அவர் நிச்சயம் உங்களுக்கு உதவுவார்' என எழுதியுள்ளார். 

கைதாகும் எதிர்க்கட்சி தலைவர்கள்...

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கடந்த மார்ச் 21ஆம் தேதி இரவு அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கெனவே டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

தெலங்கானா மேலவை அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதாவும் கடந்த சில நாள்களுக்கு முன் இவ்வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டார். குறிப்பாக, மக்களவை தேர்தல் நேரத்தில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க | மதுபான ஊழல் வழக்கு... கடந்து வந்த பாதை... முக்கிய கைதுகள் குறித்த விபரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News