'பெண்கள் சுவர்' நிகழ்ச்சி ஆதரவை திரும்பப் பெற்றார் மஞ்சு வாரியர்!

பெண்கள் சுவர் நிகழ்ச்சியில் பங்கேற்கப்பதாக அறிவித்த சில மணி நேரத்தில், அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றார் நடிகை மஞ்சு வாரியர்! 

Last Updated : Dec 17, 2018, 01:25 PM IST
'பெண்கள் சுவர்' நிகழ்ச்சி ஆதரவை திரும்பப் பெற்றார் மஞ்சு வாரியர்! title=

பெண்கள் சுவர் நிகழ்ச்சியில் பங்கேற்கப்பதாக அறிவித்த சில மணி நேரத்தில், அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றார் நடிகை மஞ்சு வாரியர்! 

கேரளா அரசாங்கம் முன்னெடுக்கும், "பெண்கள் சுவர்" நிகழ்ச்சியில் பங்கேற்கப்பதாக அறிவித்த சில மணி நேரங்களில், அந்த அறிவிப்பை, மலையாள நடிகை மஞ்சு வாரியர் வாபஸ் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

சபரிமலை விவகாரத்தில், மக்களிடம் ஆதரவு திரட்ட, வருகிற ஜனவரி ஒன்றாம் தேதி, காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை 600 கிலோ மீட்டர் நீளத்திற்கு, பெண்களை வரிசையாக நிறுத்தி, "பெண்கள் சுவர்" அமைக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.

இந்த "பெண்கள் சுவர்" நிகழ்வில், பங்கேற்க உள்ளதாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் அறிவித்திருந்தார். ஆனால் சில மணி நேரங்களில், தனது அறிவிப்பை அவர் வாபஸ் பெற்றிருக்கிறார். அரசியல் கலப்புள்ள நிகழ்வாக முன்னெடுக்கப்படுவதால், அதில் பங்கேற்க தாம் விரும்பவில்லை என்றும், நடிகை மஞ்சு வாரியர் கூறியிருக்கிறார்.

 

Trending News