மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் விபத்து ஒருவர் பலி-மூன்று பேர் படுகாயம்!

மத்திய பிரதேசத்தில் திடீர்ரென ஆம்புலன்ஸ் மீது டிராக் இடையே மோதிக்கொண்டதில் நோயாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.   

Last Updated : Jan 6, 2018, 12:23 PM IST
மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் விபத்து ஒருவர் பலி-மூன்று பேர் படுகாயம்! title=

மத்திய பிரதேசத்தில் உள்ள சாத்னாவின் இன்று காலை, ஆம்புலன்ஸ் ஒன்றின் மீது டிராக் மோதிக் கொண்டதில்,சம்பவ இடத்திலேயே நோயாளி உயிரிழந்துள்ளார். மேலும், ஆம்புலன்ஸ்ஸில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் அதிவேகத்தில் விரைந்து வந்து டிராக் மீது மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

 

Trending News