மக்களின் முன் போலி நாடகமாடுகின்றார் ராகுல் காந்தி - மோடி!

சாம் பிட்ரோடா விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாசாங்கு கோவம் வெளிப்படுத்துகிறார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்!

Last Updated : May 13, 2019, 10:55 PM IST
மக்களின் முன் போலி நாடகமாடுகின்றார் ராகுல் காந்தி - மோடி! title=

சாம் பிட்ரோடா விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாசாங்கு கோவம் வெளிப்படுத்துகிறார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்!

சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை குறித்து ‘நடந்தது, நடந்து விட்டது’ என்று கூறியதற்காக நாட்டு மக்களிடம் சாம் பிட்ரோடா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியது, ராகுல் காந்தியின் நடிப்பு என மோடி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது வழிகாட்டியான சாம் பிட்ரோடாவை திட்டுவத்றகு ராகுல் காந்திக்கு மட்டுமே உரிமை உண்டு, அதனால் தான் அவ்வாறு ராகுல் கூறியுள்ளார் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை அடுத்து சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. 

இந்த கொடூர வெறியாட்டத்தில் 3,325 சீக்கியர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு சொந்தமான பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள உடைமைகள் சூறையாடி, சேதப்படுத்தப்பட்டன.

தற்போது மக்களவை தேர்தலின்போது இந்த பிரச்சனையை மையப்படுத்தி பாஜக-வினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா ‘அது 1984-ம் ஆண்டில் நடந்து முடிந்துப்போன கதை. நீங்கள் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் என்ன சாதித்திருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்த கருவாக கொண்டு களமிறங்கிய பாஜக ‘ஆனது ஆகிப்போனது, முடிந்துப்போன கதை’ என சீக்கிய மக்களின் உயிரிழப்பை துச்சப்படுத்தும் வகையில் சாம் பிட்ரோடா தெரிவித்து மக்களின் உயிரை உதாசினம் செய்கின்றார் என மீண்டும் பாஜக-வினர் குற்றம்சாட்டினர்.  மேலும் அமித் ஷா மற்றும் சில சீக்கிய அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை ‘நடந்தது, நடந்து விட்டது’ என்று கூறியதற்காக  சாம் பிட்ரோடா நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

எனினும் ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பு பாசாங்கு கோபம் போன்றது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

Trending News