பெங்களூருவில் சாலை சீறமைப்பு பணிகள் துவங்கியது!

பெங்களுருவில் மோசமான சாலை காரனமாக, சமீபகாலமாக சாலை விபத்துக்கள் அதிகமாக நிகழ்ந்து வருகின்றது!

Last Updated : Oct 20, 2017, 12:21 PM IST
பெங்களூருவில் சாலை சீறமைப்பு பணிகள் துவங்கியது! title=

பெங்களுரு: பெங்களுருவில் மோசமான சாலை காரனமாக, சமீபகாலமாக சாலை விபத்துக்கள் அதிகமாக நிகழ்ந்து வருகின்றது!

இந்த விவகாரத்தில் அரசின் தலையீடல் வேண்டும் என பொதுமக்கள் பலரும் போராட்டம் நடத்திவந்தனர். 

முன்னதாக கடந்த அக்.,13 அன்று, பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் சாலையில் இருந்த பள்ளத்தில் தண்ணீர் நிரப்பி, தன்னை கடல் கண்ணியாக அளங்கரித்துக் கொண்டு நூதன போராட்டம் நடத்தினார்.

இதனையடுத்து சாலை சீரமைப்பு பணிகளில், கர்நாடக அரசு சற்று கவனம் செலுத்த துவங்கியுள்ளது!

இந்நிலையில் நேற்று இரவு, சாலை சீறமைப்பு பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரடியாக சென்று அமைச்சர் KJ ஜார்ஜ் ஆய்வு மேற்கொண்டார்!

Trending News