J&K புல்வாமா: பாதுகாப்பு படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுகொலை...

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 15, 2018, 10:51 AM IST
J&K புல்வாமா: பாதுகாப்பு படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுகொலை... title=

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சிர்னூ கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, மாநில போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் சிர்னூ கிராமத்தை சுற்றி வளைத்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கினர்.

இதனால் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினர். பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சில தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுடன் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

 

Trending News