ஆயுஷ்மான் பவ.... பிரதமர் மோடியின் பிறந்த நாளில் மக்களுக்கு கிடைக்க போகும் பரிசு!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், இந்த நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு 60,000 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்படும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 11, 2023, 02:17 PM IST
  • உலகின் மிகப்பெரிய அளவிலான சுகாதார காப்பீட்டு திட்டம்.
  • நாடு முழுவதும் பாஜக மேற்கொண்ட பிரச்சாரம்.
  • 2025-க்குள் காசநோய் இல்லாத இந்தியா என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை.
ஆயுஷ்மான் பவ.... பிரதமர் மோடியின் பிறந்த நாளில் மக்களுக்கு கிடைக்க போகும் பரிசு! title=

ஆயுஷ்மான பவ திட்டம்: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, இந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி ‘ஆயுஷ்மான் பவ’ (‘Ayushman Bhava’)திட்டத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது. செய்தி நிறுவனமான ANI வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா (Union Health Minister Mansukh Mandaviya), 'இந்த ஆண்டு பிரதமர் மோடியின் (PM Narendra Modi) பிறந்தநாளில், நாங்கள் 'ஆயுஷ்மான் பவ' திட்டத்தை அறிமுகப்படுத்துவோம், இதன் மூலம் அரசு நடத்தும் அனைத்து சுகாதாரத் திட்டங்களும், அந்த திட்டத்தை பெற தகுதி உடையை அனைத்து  பயனாளியையும் சென்றடையும். இதன் மூலம் மக்கள் அதிக அளவில் பலன் அடைவதை உறுதி செய்ய முடியும்.

ஆயுஷ்மான் பவ நிகழ்ச்சியின் போது முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு 60,000 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  இதன் மூலம் ஆயுஷ்மான் பாரத் என்னும் மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தினை மேலும் பலர் பெற முடியும். வரும் நாட்களில் சுகாதார சேவைகள் மற்றும் திட்டங்களை சிறந்த முறையில் மக்கள் அணுகுவதற்காக இது போன்ற முகாம்களையும் நிலழ்ச்சிகளையும் அடிக்கடி நடத்துவோம் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய அளவிலான சுகாதார காப்பீட்டு திட்டம்

ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி சுகாதார காப்பீட்டு திட்டம் (AB-PMJAY) என்பது உலகின் மிகப்பெரிய சுகாதார பாதுகாப்பு திட்டமாகும். இது ஒரு பயனாளி குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் சுகாதார பாதுகாப்பு வழங்குகிறது.

மேலும் படிக்க | அமைச்சர் அளித்த ஜாக்பாட் அப்டேட்: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியம்? எப்போது?

காசநோயை ஒழிப்பதே இந்தியாவின் இலக்கு

மாண்டவியா மேலும் கூறுகையில், கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் காசநோய் (Tuberculosis - TB) குறித்து நாங்கள் வலியுறுத்தியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். காசநோயை ஒழிப்பது குறித்த உலகின் இலக்கு 2030 என்றும் ஆனால் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் காசநோயை ஒழிப்பதே இந்தியாவின் இலக்கு என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

நாடு முழுவதும் பாஜக  மேற்கொண்ட பிரச்சாரம்

2022 ஆம் ஆண்டில், பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) நாட்டை காசநோய் (காசநோய்) இல்லாததாக மாற்றுவதற்கான ஒரு வருட திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதன் கீழ் அனைவரும் ஒரு காசநோயாளியைத் தத்தெடுத்து ஒரு வருடம் அவரைப் பராமரிப்பார்கள். 2025-க்குள் காசநோய் இல்லாத இந்தியா என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் காசநோயாளியை ஓராண்டுக்கு தத்தெடுக்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் கார்டு 

ஆயுஷ்மான் பாரத் என்பது பிரதம மந்திரி சுகாதார காப்பீட்டு திட்டம் ஆகும். இதன் கீழ், திட்டத்திற்கு தகுதியானவர்களுக்கு ஆயுஷ்மான் அட்டை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், ஆயுஷ்மான் அட்டைதாரர்கள் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறுகிறார்கள். இந்த அட்டை பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை காப்பீட்டை வழங்குகிறது.

பிரதமர் மோடி பிறந்த நாள்

பிரதமர் மோடி 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி குஜராத்தின் வாட்நகரில் பிறந்தார். இது வடக்கு குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு லாட்டரி.. ஓய்வு பெற்ற பிறகும் மாத வருமானம் பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News