7th pay commission: ஊழியர்களுக்கு குட் நியூஸ், அகவிலைப்படியில் பம்பர் உயர்வு

7th pay commission: டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்களில் இருந்து இந்த முறை அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 16, 2023, 10:55 AM IST
  • தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்படுகிறது.
  • இதில் 4% உயர்வு இருந்தால் அது 42% ஆக உயரும்.
  • இதற்குப் பிறகு, ரூ.18,000 அடிப்படைச் சம்பளம் உள்ளவர்களின் ஆண்டு அகவிலைப்படி ரூ.90,720 ஆக அதிகரிக்கும்.
7th pay commission: ஊழியர்களுக்கு குட் நியூஸ், அகவிலைப்படியில் பம்பர் உயர்வு title=

7வது ஊதியக்கமிஷன் சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட உள்ளது. 2023 ஜனவரியில் இருந்து அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கப் போகிறது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக இது குறித்து அரசு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஊதிய உயர்வு இருக்கும் என்பதால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளத்தில், உயர்த்தப்பட்ட ஊதியத்துடன், உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் ஜனவரி முதலான அரியர் தொகையும் வழங்கப்படும். டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்களில் இருந்து இந்த முறை அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது.

அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். ஊழியர்களின் சம்பளத்தில் நல்ல உயர்வு ஏற்படும். தற்போது அகவிலைப்படி 38% ஆக உள்ளது. இது 42% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரியில் அகவிலைப்படி அதிகரிப்பின் அடிப்படையில் புதிய டிஏ கணக்கிடப்படும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: மார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! 

இம்முறை அகவிலைப்படி உயர்வுக்கு பிறகு, ஊழியர்களின் ஊதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் மத்திய அரசின் சுமார் ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். ஜூலை முதல் டிசம்பர் வரை, ஏஐசிபிஐ குறியீட்டின் அதிகபட்ச எண்ணிக்கை 132.5 புள்ளிகளாக உள்ளது. அதன் அடிப்படையில் 4 சதவீத டிஏ உயர்வு நிர்ணயிக்கப்படும் என நம்பப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதில் 4% உயர்வு இருந்தால் அது 42% ஆக உயரும். இதற்குப் பிறகு, ரூ.18,000 அடிப்படைச் சம்பளம் உள்ளவர்களின் ஆண்டு அகவிலைப்படி ரூ.90,720 ஆக அதிகரிக்கும். உயர்வுக்கு பிறகு அகவிலைப்படி வித்தியாசத்தைப் பார்த்தால், ஊதியம் மாதம் ரூ.720 மற்றும் ஆண்டுக்கு ரூ.8640 அதிகரிக்கும்.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:

பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000
புதிய அகவிலைப்படி (42%) - மாதம் ரூ 7560
புதிய அகவிலைப்படி (42%) - ஆண்டுக்கு ரூ 90,720
தற்போதைய அகவிலைப்படி (38%) - மாதம் ரூ.6840
அகவிலைப்படி அதிகரிப்பு 7560-6840 - மாதத்திற்கு ரூ.720
ஆண்டு ஊதிய உயர்வு 720X12 - ரூ.8,640

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:

பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
புதிய அகவிலைப்படி (42%) - மாதம் ரூ 23,898
புதிய அகவிலைப்படி (42%) - ஆண்டுக்கு ரூ 286,776
தற்போதைய அகவிலைப்படி (38%) - மாதம் ரூ 21,622
அகவிலைப்படி அதிகரிப்பு 23898-21622 - மாதம் ரூ 2276
ஆண்டு ஊதிய உயர்வு 2276 X12 - ரூ 27,312

மேலும் படிக்க | 7th Pay Commission: மார்ச் மாதம் ஊழியர்களுக்கு 3 பெரிய மாஸ் செய்தி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News