7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ அரியர் பற்றிய முக்கிய அப்டேட்

7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிலுவையில் உள்ள 18 மாத கால டிஏ பாக்கிக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 10, 2023, 06:13 PM IST
  • நிலுவையில் உள்ள 18 மாத கால டிஏ அரியர் தொகை.
  • விரைவில் நல்ல செய்தி கிடைக்குமா?
  • காத்திருக்கும் ஊழியர்கள்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ அரியர் பற்றிய முக்கிய அப்டேட்  title=

சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. அரசு ஊழியர்கள் அகவிலைப்படியின் 18 மாத நிலுவைத் தொகைக்காக காத்திருக்கின்றனர். 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத்தொகை குறித்து அரசு முடிவெடுக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியாகும். இந்த தகவல் அவர்களுக்கு மீண்டும் நம்பிக்கை அளித்துள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிலுவையில் உள்ள 18 மாத கால டிஏ பாக்கிக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஹோலிக்கு பின் நல்ல செய்தி?

இந்த ஆண்டு ஹோலிக்குப் பிறகு இந்த ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை. கொரோனா தொற்றுநோயின் போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி முடக்கப்பட்டது.  ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை முடக்கப்பட்ட இந்த 18 மாத அகவிலைப்படி தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், முடக்கப்பட்ட 18 மாத டிஏ நிலுவைத் தொகையை ஹோலிக்குப் பிறகு அரசாங்கம் பரிசாக வழங்கக்கூடும் என ஊழியர்களும் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

மேலும் படிக்க | 7th pay commission: DA உயர்த்தப்பட்டால் எவ்வளவு சம்பளம் உயரும்?

ஏழாவது சம்பள கமிஷன்

சமீபத்தில், ஜே.சி.எம் செயலாளர் அமைச்சரவை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் நிலுவைத் தொகையைப் பற்றி விவாதிக்க நேரம் கோரி இருந்தார். மேலும், அகவிலைப்படி என்பது ஊழியர்களின் உரிமை என்றும் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் கோரினார். 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும் என்ற ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால், மத்திய ஊழியர்களின் வங்கிக் கணக்கு கணிசமாக உயரும். இதனால் தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் ​​அரசாங்கத்தால் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அப்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை மத்திய அரசு முடக்கியது. இருப்பினும், கோவிட் -19 தொற்றுநோய் முடிவுக்கு வந்ததிலிருந்து, ஊழியர்கள் இந்தத் தொகையைக் கோரி வருகின்றனர். அரசு நிதியை விடுவிக்க வேண்டும் என ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் படிக்க | 7th Pay Commission: 4% அகவிலைப்படி உயர்ந்தால்? எவ்வளவு சம்பளம் உயரும் என்று பாருங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News