அதிகளவு தக்காளி உட்கொள்ளுவதால் ஏற்படும் தீமைகள் என்ன?

அதிகளவு தக்காளி உட்கொள்ளுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

Last Updated : May 20, 2020, 03:31 PM IST
அதிகளவு தக்காளி உட்கொள்ளுவதால் ஏற்படும் தீமைகள் என்ன? title=

அதிகளவு தக்காளி உட்கொள்ளுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

தமிழர் உணவு முறையில் தக்காளியின் பங்கு மிகவும் அதிகம். நாம் சமைக்கும் அனைத்து உணவுகளிலும் தக்காளி இடம்பெறும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். இந்த தக்காளிகள் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறினாலும், அளவுக்கு அதிகமாக இந்த தக்காளியை உட்கொள்வதும் தீங்கு விளைவிக்கும் மற்றும் உடலை பல வழிகளில் சேதப்படுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

  • அதிக தக்காளி சாப்பிடுவது இரைப்பை அமிலத்தை உருவாக்குகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்க மாட்டீர்கள். இதன் காரணமாக நெஞ்செரிச்சல் பிரச்சினை உண்டாகிறது. மேலும் செரிமான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு தக்காளி உட்கொள்ளல் பிரச்சனைகளை உண்டாக்கலாம் என கூறப்படுகிறது.
  • சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களும் தக்காளியில் இருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும் என்பதை மிகக் குறைவான மக்களே அறிந்திருக்கிறார்கள், ஏனெனில் அதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. அதேசமயம், தக்காளியில் ஆக்ஸலேட் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது, இது சிறுநீரக நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
  • மூட்டு வலி மற்றும் வீக்கம் இருந்தாலும், தக்காளியைத் தவிர்த்தல் நல்லது. ஏனெனில் தக்காளியில் காரப் பொருட்கள் காணப்படுகின்றன, இது மூட்டு வலியை அதிகரிக்கும். இதனுடன், தக்காளியில் காணப்படும் சோலனின் என்ற உறுப்பு உடலின் திசுக்களில் கால்சியத்தை உருவாக்குகிறது, இது மூட்டு வலி மற்றும் வீக்க சிக்கல்களை அதிகரிக்கிறது.

Trending News