இதனால் தான் உலர் ஷாம்பூக்கள் கோடைகாலத்திற்கு சிறந்தவை, வீட்டிலேயே உருவாக்குவது எப்படி?

உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த இரண்டு ஷாம்புகளில் ஒன்றை நீங்கள் உருவாக்கலாம் மற்றும் உங்கள் தலைமுடியைக் கழுவ மிகவும் சோம்பலாக இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தலாம். நினைவில் கொள்ளுங்கள், கோடைகாலத்தில் நீங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டியது அவசியம். 

Last Updated : Jun 1, 2020, 01:14 PM IST
    • கோடைகாலத்தில், நீங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
    • உலர்ந்த ஷாம்பூவை நீங்கள் வீட்டில் எப்படி செய்யலாம்
இதனால் தான் உலர் ஷாம்பூக்கள் கோடைகாலத்திற்கு சிறந்தவை, வீட்டிலேயே உருவாக்குவது எப்படி? title=

கோடைகாலத்தில் தலைமுடி பராமரிப்பு என்பது மிகவும் கடினமானது. உங்கள் தலைமுடி ஒன்றோடு ஒன்று ஒட்டுகிறது மற்றும் உச்சந்தலையிலிருந்து வழக்கத்தை விட விரைவாக நாற்றம் வீச ஆரம்பிக்கும் போது, உங்கள் தினசரி பராமரிப்பு முறை உண்மையில் உங்களுக்கு உதவவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். வெப்பம் காரணமாக தலைமுடி ஒன்றோடு ஒன்று ஒட்டுவது இயற்கையானது. ஆனால், அதற்காக நீங்கள் விலை உயர்ந்த அல்ல கடினமாக வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமல்ல. நீங்கள் வீட்டில் அமர்ந்தவாறு உலர்ந்த ஷாம்பூவை தயாரிக்கலாம் – இனி ஒட்டும் முடி திரும்ப வராது.

ஓட்ஸ் மற்றும் பேக்கிங் சோடா

முதலில், ஒரு கப் கிரவுண்ட் ஓட்ஸ் மற்றும் ஒரு கப் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளுங்கள். அவை இரண்டும் தூள் வடிவம் கொண்டவை, எனவே அவற்றை முதலில் ஒன்றாகக் கலந்து கொள்ளவும், பின்னர் அதை ஒரு டால்கம் பவுடர் போல துளைகளைக் கொண்ட ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும், உங்கள் உச்சந்தலையில் முடிகள் ஒட்டுவது போல உணரும்போதெல்லாம் நீங்கள் இதை பயன்படுத்தலாம். இதற்கு உங்களுக்கு பேக்கிங் சோடா தேவை, ஏனென்றால் பேக்கிங் சோடா சிறந்த உறிஞ்சியாக கருதப்படுகிறது. எனவே, இது உச்சந்தலையில் இருந்து அதிகப்படியான சருமத்தை உறிஞ்சி, மணமான வாசனை அளிக்கிறது, மேலும் ஒட்டும் தன்மையைத் தடுக்கிறது. மறுபுறம், உங்கள் தலைமுடியைக் கையாள்வது மிகவும் கடினமான மேலை என்று நீங்கள் நினைத்தால், ஓட்ஸ் இருக்கிறது. கிரவுண்ட் ஓட்ஸ் சில பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, இது உங்கள் உச்சந்தலையை கவனித்துக்கொள்ளும்.

சோள மாவு மற்றும் அரிசி மாவு

இது மேலும் ஒரு எளிதான முடி பராமரிப்பு முறையாகும், இதையும் நீங்கள் எளிதாக வீட்டில் அமர்ந்தவாறு செய்யலாம். சோள மாவு மற்றும் அரிசி மாவு இரண்டும் அனைத்து இந்திய சமையலறையிலும் கிடைக்கும். இதற்கு, உங்களுக்கு இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் சோள மாவு தேவைப்படும். மேலும், நீங்கள் சில துளிகள் மிளகுக்கீரை எண்ணெய் சேர்க்கலாம். இந்த அத்தியாவசிய எண்ணெய் கோடை வெப்பத்தில் உச்சந்தலைக்கு சிறந்தது. அரிசி மாவு மற்றும் சோள மாவு ஆகியவற்றை கலந்த பின் அவை ஒரு சீரான தூளாக மாறும். பின்னர், தலையில் தடவுவதற்கு ஒரு பிரஷ் பயன்படுத்தவும், பெண்கள் மேக்-அப் செய்ய பயன்படுத்தும் பிரஷ் உச்சந்தலையில் தடவ சிறந்தது. இதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது அவசியம். அரிசி மாவு உங்கள் முடியின் வேர்களை வலுப்படுத்தி, சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கும். மறுபுறம், சோள மாவு உச்சந்தலையில் இருந்து அதிகப்படியான சருமத்தை நீக்குகிறது, மேலும் எண்ணெய்படிவம் மற்றும் நாற்றம் வீசுவதைத் தடுக்கிறது.

உங்கள் வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு நீங்கள் இந்த இரண்டு ஷாம்பூக்களில் ஒன்றை எளிதாக செய்யலாம். மேலும் உங்கள் தலைமுடியைக் கழுவ மிகவும் சோம்பலாக இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தலாம். கோடைகாலத்தில், நீங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டியது அவசியம். அது உங்கள் முடி மற்றும் உச்சந்தலைக்கும் பொருந்தும்.

(மொழியாக்கம்: தமிழ்ச் செல்வன்)

Trending News