Rasipalan October 07: புரட்டாசி 21ம் நாள் ராசிபலன்

சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 7, 2021, 06:51 AM IST
Rasipalan October 07: புரட்டாசி 21ம் நாள் ராசிபலன் title=

புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம். 

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே...    

ராசிபலன் - 07-10-2021

மேஷம்: நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சிறு விஷயங்களிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். வெகுமதிகள் கிடைக்கும் நாள்.

ரிஷபம்: வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வர்த்தக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். புதுவிதமான ஆசைகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்: இணையம் சார்ந்த பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சுபிட்சமான நாள்.

கடகம்: தொழில் தொடர்பான பணிகளில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். தனவரவுகள் மேம்படும் நாள்.

Also Read | இந்த ஆண்டு நவராத்திரி ஏன் முக்கியமானது? தெரிந்துக் கொள்வோம்

சிம்மம்: குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்.

கன்னி: குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். புரிதல் உண்டாகும் நாள்.

துலாம்: வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்க வேண்டும். வாழ்க்கைத்துணைவருடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். அனுசரித்து செல்ல வேண்டிய நாள்.

விருச்சிகம்: உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.

Also Read | இறைவனுக்கு உகந்த எட்டு வகையான மலர்கள் எவை? தெரியுமா?

தனுசு: கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். தொழில் தொடர்பான புதுவிதமான அனுபவம் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். ஆதரவு கிடைக்கும் நாள்.

மகரம்: வீடு மற்றும் வாகனம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். புத்துணர்ச்சி பிறக்கும் நாள்.

கும்பம்: மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோர்களின் குணநலன்கள் அவ்வப்போது வெளிப்படும். இடுப்பு சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆதரவு கிடைக்கும் நாள்.

மீனம்: தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களிடம் சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது விழிப்புணர்வு வேண்டும். காலதாமதம் ஏற்படும் நாள். 

Also Read | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News