நடிகர்கள் என்ன அம்பேத்கரா பெரியாரா?... சத்யராஜ் விளாசல்

நடிகர்கள் ஒன்றும் பெரியாரோ அம்பேத்கரோ இல்லை என நடிகர் சத்யராஜ் கடுமையாம விமர்சனம் செய்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 11, 2022, 04:43 PM IST
  • நடிகர்கள் மீது சத்யராஜ் கடும் விமர்சனம்
  • மனதின் மையம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்
  • நடிகர்கள் பெரியாரோ, அம்பேத்கரோ இல்லை என தெரிவித்தார்
 நடிகர்கள் என்ன அம்பேத்கரா பெரியாரா?... சத்யராஜ் விளாசல் title=

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக உயர்ந்து தற்போது குணசித்திர வேடங்களில் நடித்துவருகிறார். பொதுவாக தன்னை திராவிட சித்தாந்தவாதியாக காட்டிக்கொள்ளும் சத்யராஜ் சமூக பிரச்னைகளுக்கு தவறாமல் குரல் கொடுப்பவர். மேலும் தன்னுடைய பகுத்தறிவு பேச்சாலும் பிரபலமடைந்தவர். தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறான பெரியார் படத்திலும் நடித்து தன்னை தீவிர பெரியாரியவாதியாக பிரகடன்பப்படுத்திக்கொண்டவர். இந்தச் சூழலில், மனதின் மையம் அறக்கட்டளையின் ஒரு அங்கமான நேசம் சேவை மையம் தொடக்க விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. 

இந்த விழாவில் கலந்து கொண்ட சத்யராஜ் பேசுகையில், “தற்கொலை தடுப்பு என்பது இன்றைக்கு மிகவும் அவசியமான விஷயம். தற்கொலைக்கு முக்கிய காரணம் வறுமை, உறவில் சிக்கல், மூட நம்பிக்கைகள், சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம், பெண் அடிமைத்தனம், பண்பாடு, கலாசாரம், நாகரீகம், பொருளாதார சிக்கல், மனநலம் பாதித்த சமூகம் தரும் மன அழுத்தம் ஆகும்.

Ambedkar, Periyar

நீட் தேர்வு கூடாது என்ற எண்ணத்தில் உள்ளவன் நான். முதல் தலைமுறை பட்டதாரிகளை நீட்தேர்வு பாதிக்கும் என்பதால் அது அவசியம் இல்லை. டாக்டர், வக்கீல்கள் குழந்தைகளை அதே பதவிக்கு கொண்டு வருவது மிகவும் எளிது. ஆனால், படிக்க தெரியாத பெற்றோரின் குழந்தைகள் அவர்கள் படித்து முன்னுக்கு கொண்டுவருவது ரொம்ப முக்கியம்.

மனநலம் மேம்படுத்தினால் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் சரியாகி விடும். உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு டாக்டர்களிடம் செல்கிறோம். ஆனால், மனநலம் குன்றினால் மட்டும் டாக்டர்களிடம் செல்வதில்லை. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், எம்.ஜி.ஆரின் பாடல்களை கேட்பேன். 

மேலும் படிக்க | மு.க. ஸ்டாலின் வாழ்க - பாரதியார் நினைவு நாளில் இளையராஜா புகழாரம்

அதன் மூலம் நிறைய தெளிவு கிடைக்கும். நடிகர்கள் என்றால் எல்லாம் தெரிந்தவர்கள் என நினைத்து கொண்டுள்ளனர். ஆனால், நடிகர்களுக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது. நடிகர்கள் ஒன்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்களோ, அறிஞர்களோ அல்ல. எங்களுக்கு சாப்பாடு போடுங்கள் ஆனால் எங்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடாதீர்கள். அது தேவையில்லை” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News