பிரியாமணிக்கு வரும் 23-ம் தேதி கெட்டிமேளம்

Last Updated : Aug 7, 2017, 11:14 AM IST
பிரியாமணிக்கு வரும் 23-ம் தேதி கெட்டிமேளம் title=

வரும் 23-ம் தேதி நடிகை பிரியாமணிக்கும் தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் பெங்களூரில் திருமணம் நடைபெறுகிறது. 'கண்களால் கைது செய்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவால் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரியாமணி. 

டைரக்டர் அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்' படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் சில நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக செயல்பட்டு வந்தார். 

பிரியாமணிக்கும், தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்து வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெங்களூருவில் நிச்சயதார்த்தம் நடந்தது. 

பிரியாமணி மற்றும் முஸ்தபா ராஜ் திருமணம் வருகிற 23-ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது. திருமணத்தை இருவரும் பதிவு செய்துகொள்கிறார்கள். இவர்களின் திருமணதிற்கு ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். 

Trending News