காதலரை மணந்தார் நடிகை பிரியாமணி

Last Updated : Aug 24, 2017, 10:15 AM IST
காதலரை மணந்தார் நடிகை பிரியாமணி title=

'கண்களால் கைது செய்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவால் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரியாமணி. டைரக்டர் அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்' படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் சில நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக செயல்பட்டு வந்தார். 

பிரியாமணிக்கும், தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்த நிலையில் நேற்று இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

பிரியாமணி-முஸ்தபாராஜ் திருமணம் பெங்களூருவில் நேற்று எளிய முறையில் நடந்தது. அங்கு சிவாஜி நகரில் உள்ள பதிவு துறை அலுவலகத்துக்கு சென்று இருவரும் மாலை மாற்றி பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். 

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் மட்டுமே இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது. 

Trending News