அவன் உயிர் என் கையில் தான்.. பிஸ்டலை கையில் எடுத்த ஷண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்

Anna Serial Today (27.8.2024) Episode: இன்றைய அண்ணா சீரியல் எபிசோட்டில் என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத் தவறாதீர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2024, 11:22 AM IST
அவன் உயிர் என் கையில் தான்.. பிஸ்டலை கையில் எடுத்த ஷண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்  title=

Anna Serial Latest Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் கோப்பெருந்தேவி கழுத்தில் தாலி கட்டியது போல் காட்டப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கோப்பெருந்தேவி கழுத்தில் தாலி கட்டியது சரவணன் தான் என்பது தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து சண்முகமும் அவனது தங்கைகளும் ஊருக்கு கிளம்பி வருகின்றனர், ஷண்முகம் மதுரையில் நடந்த விஷயம் எதுவும் பரணிக்கு தெரிய வேண்டாம் என்று தங்கைகளிடம் சொல்ல எல்லாரும் சேர்ந்து இங்கு நடந்த விஷயத்தை மூடி மறைத்து விடுகின்றனர்.

அடுத்து வெட்டுக்கிளி பாலக்காடு ஒயின் ஷாப்பில் சரக்கடித்து கொண்டிருக்க அங்கு சனியன் வர வெட்டுக்கிளி அவனை பார்த்ததும் துரத்தி கொண்டு ஓட சனியன் வெட்டுக்கிளியை தள்ளி விட்டு எஸ்கேப் ஆகிறான், இதன் பிறகு வெட்டுக்கிளி வீட்டிற்கு ஓடி வந்து விஷயத்தை சொல்ல நீ எனக்கு போன் பண்ணி இருந்தால் நானே அங்கு வந்து இருப்பேனே என்று திட்டுகிறான்.

அந்த முத்துப்பாண்டி தான் அப்பனை காப்பாற்ற சனியனை தப்பிக்க வைத்து இருக்கான் என்று கோபப்பட சூடாமணி முத்துப்பாண்டி அன்னைக்கு நம்ம கூட தான் இருந்தான், என்னை கொல்ல வந்தவனை பற்றி சொல்லி என்னை கைப்பற்றியதும் அவன் தான், நீ அவனை போய் பாரு என்று சொல்ல ஷண்முகம் சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி வருகிறான்.

இங்கே முத்துப்பாண்டி தனது பிஸ்டலை கழட்டி மீண்டும் சரி செய்து கொண்டிருக்க ஷண்முகம் அங்கு வந்து சனியனை தப்பிக்க வைத்து உன் அப்பனை காப்பாற்ற பாக்கறியா என்று கோபப்பட முத்துப்பாண்டி நீ சனியனை பிடித்து கொடு என் அப்பனுக்கு நான் தண்டனை வாங்கி தரேன் என்று சொல்கிறான்.

இதை கேட்டு ஷாக்காகும் சௌந்தரபாண்டி அவன் என்னை மாட்டி விட நினைக்கிறதுல ஒரு நியாயம் இருக்கு.. உன்னை போலீஸ் ஆக்குனதே நான் தான், நீ என்னையே ஜெயிலுக்கு அனுப்பனும்னு சொல்ற என்று கோபப்பட ஷண்முகம் முத்துபாண்டியை ரூமிற்குள் அடைத்து வைத்து விட்டு அவனது பிஸ்டலை எடுத்து சனியனை தேடி கிளம்புகிறான்.

பாக்கியம் அவனை தடுத்து நிறுத்த சனியன் ஒழுங்கா வந்து சாட்சி சொல்ல ஒத்துக்கிட்டா அவன் தப்பிச்சான், இல்லைனா அவன் உயிர் என் கையில் தான் என்று துப்பாக்கியை சுட அடைகின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - கார்த்திகை தீபம் அப்டேட்: முகத்திரையை அகற்றிய ரியா.. அதிர்ச்சி அடைந்த அம்பிகா.. அடுத்து என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News