டிவிட்டருக்கு பாய் சொன்னார் குஷ்பு!

Last Updated : Jul 19, 2017, 10:41 AM IST
டிவிட்டருக்கு பாய் சொன்னார் குஷ்பு! title=

சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக கணக்கு தொடங்கி பலர் பிரபலங்கள் அதில் தங்களுடைய கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது டிவிட்டர் பக்கத்திலிருந்து நடிகை குஷ்பு விலகியுள்ளார். 

குஷ்புவன் இறுதி ட்வீட்:-

”நண்பர்களே குட்பை! வலைத்தள மேடையை தேசத்தை வளர்க்கப் பயன்படுத்துங்கள் பிரிப்பதற்காக வேண்டாம். வெறுப்பையும் பழிதீர்ப்பதையும் விட்டு விடுங்கள், அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் இவற்றைப் பரப்புங்கள்”.

மேலும், எப்போதுமே டிவிட்டர் தளத்துக்கு அடிமையாகிவிட்டது போல் தொடர்ச்சியாக செயலாற்றி வந்ததால் மட்டுமே விலகியுள்ளார் என்றும், வேறு எந்தவொரு தனிப்பட்ட காரணமுமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Trending News