கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை... ரியாஸ்கான் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ரியாஸ் கான் மீது மலையாள நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 26, 2024, 03:51 PM IST
  • நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார்.
  • ரியாஷ் கான் தன்னை தகாத உறவுக்கு அழைத்ததாக புகார் கூறியுள்ளார்.
கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை... ரியாஸ்கான் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு title=

தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகர் ரியாஸ்கான். இவரது மனைவி உமாரியாசும் சினிமாவில் புகழ்பெற்ற நடிகை தான். இந்நிலையில் ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரைத்துறையில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் தொடர்ந்து வருவதால், மலையாள சினிமா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்த வகையில் மலையாள நடிகை ஒருவர் ரியாஸ் கான் தன்னை தகாத உறவுக்கு அழைத்ததாக புகார் கூறியுள்ளார்.

மலையாள சினிமாவில் பெண் கலைஞர்களுக்கு எதிரான நடிக்கும் பாலியல் சீண்டல்களை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி பல பெண்களிடம் விசாரணை நடத்தி கடந்த 2019 ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 4 வருடங்களுக்கு மேலாக நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த அறிக்கை வெளியானது. இந்த அறிக்கை வெளியானதற்கு பின்னர் பல நடிகைகள் தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | Movies releasing in September: செப்டம்பரில் வெளியாகவிருக்கும் மாஸ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ..

ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார். அதில், தான் பிளஸ் டூ முடித்த நேரத்தில் தன்னை அணுகிய நடிகர் சித்திக், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அப்போது பலாத்காரம் செய்ததாக அவர் கூறியிருந்தார். இந்த புகார்களைத் தொடர்ந்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து சித்திக் விலகியுள்ளார். சித்திக் தனது ராஜினாமா கடிதத்தை அம்மா தலைவர் மோகன்லாலுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து , நடிகர் ரியாஸ் கான் மீதும் நடிகை ரேவதி சம்பத் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஒரு புகைப்படக் கலைஞர் என் அனுமதி இல்லால் ரியாஸ் கானிடம் தனது தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து எனக்கு இரவு ரியாஸ் கானிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது ரியாஸ் கான் ​​பாலியல் உறவில் ஆர்வம் உள்ளதா என்று கேட்டதாகவும், வெளிப்படையான கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி தகாத உறவிற்கு அழைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அதோடு தனது தோழிகளையும் ஏற்பாடு செய்து தருமாறு ரியாஸ்கான் கேட்டதாக ரேவதி புகார் கொடுத்திருக்கிறார். இந்தச் செய்தி இப்போது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து அங்கு பெரிய நடிகர்களின் பெயர் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகிறது.

நடிகைகள் நேரடியாகவே ஊடகங்களில் தங்களுக்கு நடந்த பிரச்சனையை துணிச்சலாக கூறி வருகிறார்கள். மேலும் இப்போது ரியாஸ் கானை சினிமாவில் இருந்தே ஒதுக்கி வைக்க வேண்டும் என பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க | Yuvan Shankar Raja: என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும் - யுவன் சங்கர் ராஜா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News