‘மானம்தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழை மட்ட’ - நயன்தாரா படத்தை புறக்கணித்த ஜிபி முத்து

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தில் நடிப்பதற்கு டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவுக்கு வாய்ப்பு வந்தது.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 23, 2022, 02:21 PM IST
  • டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து
  • பிக்பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்டார்
  • பல திரைப்படங்களில் வாய்ப்பு வருகிறது
‘மானம்தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழை மட்ட’ - நயன்தாரா படத்தை புறக்கணித்த ஜிபி முத்து title=

டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. சாமானிய பேச்சும், உடல்மொழியும் அவரை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமான அவர் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்டார். அந்தப் போட்டியில் சில வாரங்களே இருந்தாலும் அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் பக்குவமாக இருந்ததை கண்டு மக்கள் நெகிழ்ந்துபோனார்கள்.

இதனால் இந்த சீசனில் வலுவான போட்டியாளராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது குடும்பத்தையும், மகனையும் பிரிந்து இருக்க முடியாது என்பதற்காக நிகழ்ச்சியின் பாதியில் அவரே வெளியேறினார். அப்படி அவர் வெளியேறினாலும் அந்த செயலையும் மக்கள் கொண்டாடினார்கள்.

இப்படி படிப்படியாக வளர்ந்துவரும் ஜிபி முத்து திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் சன்னி லியோன் மற்றும் சதீஷுடன் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார். அதற்கான ப்ரோமோஷன்களிலும் அவர் கலந்துகொண்டார். இந்தப் படம் மட்டுமின்றி பல படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்துவருகின்றனர்.

Nayanthara

அதன்படி நயன்தாரா நடித்திருக்கும் கனெக்ட் படத்திலும் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. இருப்பினும் சில காரணங்களால் அதில் முத்துவால் நடிக்க முடியவில்லை. இந்தச் சூழலில் கனெக்ட் படத்தின் ஸ்பெஷல் ஷோ சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது. அந்த ஷோவுக்கு ஜிபி முத்துவும் அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் படத்தின் பாதியிலேயே அவர் வெளியேறிவிட்டார். இந்தச் சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், “கனெக்ட் படத்தின் ஸ்பெஷல் ஷோ நடத்தியவர்கள் என்னிடம் சொன்னது வேறு. அங்கு என்னை நடத்திய விதம் வேறு. நயன்தாராவுடன் அமர்ந்து படம் பார்க்கலாம் வாங்க என்றுதான் என்னை கூப்பிட்டார்கள். ஆனால் அழைத்து சென்று ஏதோ ஒரு ஓரமாக உட்கார வைத்தார்கள். 

எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அதனால் படம் பார்க்காமலேயே வெளியே வந்துவிட்டேன். இதெல்லாம் நயன்தாராவுக்கு தெரியாது. அவரது பவுன்சர்கள் என்னை ரொம்ப தரக்குறைவா பேசினாங்க. தூர போனு சொல்லிட்டாங்க.

இதனால் நான் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டேன். பின்னர் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் என்னை ஃபோனில் அழைத்தார். பாதி தூரம் வந்துவிட்டேன், இன்னொரு முறை சந்திக்கலாம் என்று கூறிவிட்டேன்” என்றார். தற்போது ஜிபி முத்துவின் இந்தப் பேட்டியும், அவரது செயலும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | IMDB TOP 10 MOVIES: சொதப்பிய பாலிவுட் படங்கள்! அசத்திய தென்னிந்திய படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News