கார்த்திக்கிடம் உண்மையை சொல்ல முடிவெடுத்த மீனாட்சி... கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

ட்விஸ்ட் கொடுத்த தீபா... கார்த்திக்கிடம் உண்மையை சொல்ல முடிவெடுத்த மீனாட்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்    

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 17, 2023, 02:32 PM IST
கார்த்திக்கிடம் உண்மையை சொல்ல முடிவெடுத்த மீனாட்சி... கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்  title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்று தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தின்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மீனாட்சியிடம் சென்று ரூபஸ்ரீ குறித்து கேட்க அவள் ஷாக்கான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

குடும்ப கதையை பிண்ணனியாக கொண்ட கார்த்திகை தீபம் தொடருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் மட்டுமன்றி, பல இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொடர்களுள் ஒன்றாக விளங்குவது, கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ள கார்த்திகை தீபம் சீரியல் பல எதிர்பாராத விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. 

அதாவது, மீனாட்சி ஆமாம் தம்பி அவ வேற யாரையோ வச்சி தான் பாடிட்டு இருக்கா என்று தீபாவை மனதில் நினைத்து கொண்ட சொல்ல கார்த்திக் அந்த பொண்ணு யார் என்று கேள்வி கேட்க மீனாட்சி தீபா தான் என்று சொல்ல வரும் போது அங்கு வரும்  தீபா அது பல்லவி என்ற பொண்ணு தான் என்று சொல்லி உண்மையை மறைகிறாள். 

பிறகு மீனாட்சி உண்மையை சொல்லி இருக்க வேண்டியது தானே என்று தீபாவை திட்ட இப்ப இருக்கிற சூழ்நிலையில் இந்த உண்மையை சொல்ல முடியாது, அப்படி சொன்னா அதை கார்த்திக் சார் எப்படி எடுத்துபாருனும் தெரியல என்று சொல்லும் அவள் ஒருநாள் கண்டிப்பா உண்மையை சொல்லுவேன் எனவும் பதில் கொடுக்கிறாள். 

இதனை தொடர்ந்து ரூமுக்குள் ஐஸ்வர்யா தீபாவுக்கு எதிராக இருந்த அபிராமியையும் ஆப் பண்ணிட்டாங்க, இப்போ நான் என்ன பண்ணுவேன் என யோசித்து அவளது அம்மா கீதாவுக்கு போன் செய்து ஒரு ஐடியா கேட்க அவள் பாக்கியராஜ் படத்துல இப்படி பண்ணுவாங்க, அதே மாதிரி பண்ணலாம் என படத்தின் காட்சிகளை சொல்ல ஐஸ்வர்யா இதுக்கு தான் உனக்கு போன் பண்றது இல்ல என திட்ட நவராத்திரி முடியட்டும் நான் என்ட்ரி கொடுக்கிறேன், அந்த தீபாவை விரட்டிடலாம் என்று சொல்கிறாள். 

மேலும் படிக்க | டி.இமான் விவாகரத்துக்கு SK தான் காரணமா...? முழு பின்னணி என்ன?

அதன் பிறகு கார்த்திக் தீபா கோவிலுக்கு சென்று வீட்டிற்கு வந்திருக்க தீபா கார்த்திக்கிடம் நன்றி சார் என்று சொல்ல இப்படியே மரியாதையாவே பேசிட்டு இருந்தா வாழ்க்கை புல்லா இப்படியே இருக்கா வேண்டியது தான் என்று சொல்கிறான், பிறகு தீபா அவளுக்கு ரூமுக்கு வர ரூம் பூட்டி இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | லியோ படத்திற்கு 4 மணி காட்சி? முக்கிய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News