நடிகர் பிரசாந்திற்கு அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! காரணம் என்ன?

Latest News Actor Prasanth Fined For Traffic Violations : நடிகர் பிரசாந்திற்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்திருக்கின்றனர். இதற்கான காரணம் என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Aug 2, 2024, 09:29 AM IST
  • பிரசாந்திற்கு அபராதம்
  • எதற்காக தெரியுமா?
  • ரசிகர்கள் ஷாக்!
நடிகர் பிரசாந்திற்கு அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! காரணம் என்ன?  title=

Latest News Actor Prasanth Fined For Traffic Violations : பிரபல நடிகர் பிரசாந்திற்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். காரணம் என்ன தெரியுமா?

நடிகர் பிரசாந்த்:

தமிழ் திரையுலக நடிகர் பிரசாந்த், தற்போது தனது அந்தாகன் படத்தின் ப்ரமோஷன்களில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில், அவர் போக்குவரத்து போலீஸாரால் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறார். ப்ரமோஷனுக்காக ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த அவர், பைக்கில் பயணித்தவாறு பேட்டி கொடுத்தார். இதனை அந்த சேனல், பதிவிட்டது. இதையடுத்துதான் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்திருக்கின்றனர். 

பிரசாந்தும், அவருடன் பயணித்த விஜே தாராவும் ஹெல்மெட் அணியாமல் பயணித்துள்ளனர். இதனால் இருவருக்கும் சேர்த்து ரூ.2000 அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, பிஃபோர்-ஆஃப்டர் என்று கலாய்த்து பதிவினை வெளியிட்டிருக்கின்றனர்.

வயநாடு பேரழிவிற்கு உதவ வேண்டுகோள்:

வயநாடு பேரழிவிற்கு யார், யார் எவ்வளவு உதவி பண்ண முடியுமோ பண்ணுங்க. நாங்களும் உதவி பண்ணுகிறோம் என மதுரையில் அந்தகன் டிரையிலர் வெளியீட்டு விழாவிற்கு வந்த நடிகர் பிரசாந்த் பேட்டியளித்திருக்கிறார்.

 நடிகரும், இயக்குனரான தியாகராஜன் இயக்கத்தில் டாப் ஸ்டார்  பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அந்தகன். இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து சிம்ரன், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், கார்த்திக், வனிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மாட்டுத்தாவணி எதிரே உள்ள வெற்றி திரையரங்கில் நடைப்பெற்றது.

மேலும் படிக்க | நடிகர் பிரசாந்த் முழு சொத்து மதிப்பு- எவ்வளவு தெரியுமா?

திரையரங்கம் வந்த  நடிகர் பிரசாந்த் திற்கு ஆளுயர மாலை அணிவித்து  வரவேற்றனர். திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து டிரைலரை பார்த்து ரசித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அந்த கண் திரைப்படம் ஆகஸ்ட் 9ல் ரிலீஸ் ஆக உள்ளது. அதன் முன்னோட்டமாக இன்று முதன் முதலாக மதுரையில் டிரெய்லர் வெளியீட்டு விழா விற்கு வந்துள்ளேன். மதுரை தென் மாவட்டங்களில் மிக முக்கியமான நகர். சிம்ரன், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், கார்த்திக், வனிதாயோகிபாபு எல்லோரும்  நடித்துள்ளார்கள். படம் மிகவும் நல்லா வந்துள்ளது.

டிரைய்லரை பார்த்த எல்லாரும் படம் நல்ல வந்திருப்பதாக சொன்னார்கள். தளபதியும் டிரைய்லர் பார்த்து படம் நல்லா வந்திருப்பதாக சொன்னார்கள். வயநாடு பேரழிவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவுதான் அவர் அந்த குடும்பங்களுக்கு ஆறுதல் சொன்னாலும் தகாது.  யார் யார் எவ்வளவு உதவி பண்ண முடியுமோ பண்ணுங்க நாங்களும் உதவி பண்ணுகிறோம் என்றார். அந்தகன் திரைப்படத்திற்கு அடுத்து கோட்டு படம் வெளிவர இருக்கிறது. இப்படி  அடுத்தடுத்து படங்கள் வெளி வர இருக்கிறது என்றார்.

மேலும் படிக்க | Prasanth : நடிகர் பிரசாந்திற்கு 2வது திருமணமா? மணப்பெண் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News