ஜெகதீஷ் வீட்டுக்குள் நுழைந்த புது தாரா - மாரி சீரியல் எபிசோட் அப்டேட்!

Maari Zee Tamil mega serial update: ஜெகதீஷ் வீட்டுக்குள் நுழைந்த புது தாரா.. மாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - RK Spark | Last Updated : May 31, 2023, 11:02 AM IST
  • ஜெகதீஷ் தாலி கட்ட சம்மதிக்கிறான்.
  • தாலியை தேவியம்மா முன்னாடி வைத்து வேண்டுகிறாள்.
  • மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ஜெகதீஷ் வீட்டுக்குள் நுழைந்த புது தாரா - மாரி சீரியல் எபிசோட் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் மாரி ஜெகதீஷ்க்கும் தேவியம்மாவுக்கும் 60-ம் கல்யாணம் செய்ய திட்டமிட்ட நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.  அதாவது தாலி வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்த மாரி ஜெகதீஷிடம் நாளைக்கு உங்களுக்கு 60-ம் பிறந்தநாள். நீங்க தேவியம்மா கழுத்தில் தாலி கட்டணும்னு என்னுடைய ஆசை என்று சொல்ல ஜெகதீஷ் இல்லாதவங்களுக்கு எப்படி தாலி கட்ட முடியும் என கேட்க மாரி தேவியம்மா கண்டிப்பாக வருவாங்க என்று சொல்ல ஜெகதீஷ் தாலி கட்ட சம்மதிக்கிறான். பிறகு தாலியை தேவியம்மா முன்னாடி வைத்து வேண்டுகிறாள்.

மேலும் படிக்க | திரை விருந்துக்கு தயாரா மக்களே? இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் & தொடர்களின் லிஸ்ட்!

இதனை தொடர்ந்து இந்த விசயங்களை ஒட்டு கேட்ட ஸ்ரீஜா ஜாஸ்மின் டீமிடம் சொல்ல அதை அவர்கள் தாராவுக்கு தெரியப்படுத்த அவள் நாளைக்கு காலையில் அங்க இருப்பேன் என சொல்கிறாள். மறுநாள் காலையில் மாரி சீக்கிரம் எழுந்து குளித்து விட்டு சூர்யாவை எழுப்பி விட்டு நான் போய்ட்டு மாமாவுக்கு கேசரி செய்கிறேன் என கிட்சனுக்கு செல்கிறாள்.  அதற்கு அடுத்து ஜாஸ்மின் டீம் தாராவுக்காக காத்திருக்க மாரி ஸ்வீட் செய்து கொண்டிருக்க புது தாராவாக நடிகை சாதனா என்ட்ரி கொடுக்கிறார். இது நான் வாழ வந்த வீடு இல்ல, அழிக்க வந்த வீடு என இடது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைகிறாள். வரும் போதே கையில் மாலை மற்றும் சுவீட்டுடன் வரும் தாரா ஜெகதீஷ் கழுத்தில் மாலை போட்டு ஆசிர்வாதம் வாங்க ஜெகதீஷ் கடுப்பாகி நகர்ந்து செல்கிறார். 

maari

பிறகு தாரா ஸ்வீட் கொடுக்க அவர் அதை வாங்க மறுக்க ஊட்டி விட செல்ல ஜெகதீஸ் அதை வாங்கி ஓரமாக வைக்கிறார். பிறகு மாரி கேசரி கொண்டு வந்து கொடுத்து வாழ்த்து சொல்ல அதை சாப்பிட்டு தேவியும் இப்படி தான் கேசரி செய்து கொடுப்பாள் என்று சொல்கிறாள். அதன் பிறகு தாரா சூர்யாவிடம் டிராமா போட்டு அவனிடம் பேசுகிறாள். அடுத்ததாக தாரா தனது டீமை அழைத்து மாரி போட்ட திட்டத்தை வைத்தே ஜெகதீஷை என் கழுத்தில் தாலி கட்ட வைத்து தேவி முகத்துல கரியை பூசுறேன் என சவால் விடுகிறாள், பின்னர் சூர்யாவிடம் சென்று உங்க அப்பாவோட 60-வது பிறந்த நாளை 60-ம் கல்யாணமாக நடத்த வேண்டும், அவர் என் கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று சொல்ல மாரி இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | திரை விருந்துக்கு தயாரா மக்களே? இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் & தொடர்களின் லிஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News