சீர் கேட்ட கோகிலாவிற்கு தர்ம அடி கொடுத்த போலீஸ்! கலகல ட்விஸ்டுகளுடன் மீனாட்சி பொண்ணுங்க!

Meenakshi Ponnunga Serial Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  

Written by - Yuvashree | Last Updated : Jun 19, 2023, 01:50 PM IST
  • ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர், மீனாட்சி பொண்ணுங்க.
  • இதில், பல பரபரப்பான திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.
  • இன்றும் பல ட்விஸ்டுகள் காத்துக்கிடக்கின்றன
சீர் கேட்ட கோகிலாவிற்கு தர்ம அடி கொடுத்த போலீஸ்! கலகல ட்விஸ்டுகளுடன் மீனாட்சி பொண்ணுங்க! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொடர்களுள் ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல எதிர்பாராத விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 

இதுவரை நடந்தவை..

மீனாட்சி என்ற அம்மவையும் அவளது மகள்களையும் சுற்றி சுழலும் கதை, மீனாட்சி பொண்ணுங்க. இந்த தொடரில், கடந்த சில நாட்களாகவே யாரும் எதிர்பாராத வகையிலான பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. முக்கிய கதாப்பாத்திரத்திற்கு எதிர்பாராத வகையில் திருமணம், அதை தடுக்க உயிருடன் வந்த மீனாட்சி என கடந்த வாரம் மீனாட்சி பொண்ணுங்க பரபர நிலையை எட்டியது. இதையடுத்து, மீனாட்சி எப்படி உயிருடன் வந்தால் என்று புஷ்பா சங்கிலியை கேட்க அவள் எப்படி தப்பினாள் புரியவில்லை என்று கூற, அவளை விடக்கூடாது என்று புஷ்பா கூறுகிறாள். பிறகு மீனாட்சி வீட்டில் விளக்கேற்றி மூன்று பெண்களையும் நல்ல முறையில் வாழ வைப்பேன் என சாமி கும்பிடுகிறாள். மீனாட்சியை காப்பாற்றியதால் சக்தி தன்னை பாராட்டுவாள் என்று காத்துக் கொண்டிருந்த வெற்றியிடம் சக்தி அம்மா உயிருடன் இருப்பதை ஏன் கூறவில்லை நாங்கள் துக்கத்தில் இருந்தோம் என்று கூறி வெற்றியை அறைகிறாள்.  நான் கோபித்துக் கொண்டு போய் விடுவேன் என்று வெற்றி சொல்ல சக்தி நீ போ என்று சொல்ல வெற்றி உண்மையிலேயே கோபித்துக் கொண்டு போய் விடுகிறான். இதையடுத்து என்ன நடக்கவுள்ளது? வாங்க பார்க்கலாம். 

மேலும் படிக்க | அவமானத்தால் ரத்னாவுக்கு சண்முகம் கொடுத்த வாக்கு.. சந்தோஷத்தில் சௌந்தரபாண்டி - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

இன்றைய எபிசோட்..

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் யமுனாவை நான் மருமகளாக ஏற்க முடியாது கூடுதலாக 10 லட்சம் பணம் வேண்டும் என்று கோகிலா கேட்கிறாள்.  இதனால் வெற்றி உடனே அங்கே போலீசை வரவழைக்கிறான். கோகிலா, கனகலிங்கம், அசோக் என மூவரையும் போலீசார் கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்கள்.  கோகிலா, கனகலிங்கம், அசோக் என மூவரையும் போலீசார் அடித்து வரதட்சணை கேட்க மாட்டோம் என்று எழுதி வாங்குகிறார்கள்.  போலீஸ் கொடுத்த அடியால் பயந்து போன கோகிலா மீனாட்சியின் வீட்டிற்கு சென்று நல்லபடியாக பேசுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சரிகமப சீசன் 3 டைட்டில் வின்னர் இவரா..? அடுத்த இடம் யாருக்கு தெரியுமா? முழு விவரம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News