தற்கொலைக்கு முயலும் யமுனா - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

Meenakshi Ponnunga: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.   

Written by - RK Spark | Last Updated : Dec 21, 2023, 12:47 PM IST
  • தற்கொலைக்கு முயலும் யமுனா.
  • மீனாட்சி எடுத்த முடிவு.
  • மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்
தற்கொலைக்கு முயலும் யமுனா - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்! title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பூஜா சொன்னது போல அங்கே சித்தாள்கள் தங்கியதற்கான தடயமே இல்லை. ரங்கநாயகி பூஜாவிடம் சக்தியை நான் பார்த்துக் கொள்கிறேன், நீ குழப்பாதே என்று சொல்லி திட்டுகிறாள்.  பிறகு யமுனா கார்த்திக்கிற்கு போன் செய்து நான் உங்களை உடனே பார்த்தாக வேண்டும் என்று சொல்ல, அவன் தனக்கு வேலை இருக்கிறது என்று சொல்ல, யாரு உங்க போன்ல பேசினது என்று யமுனா கேட்க, தன்னை சந்தேகப்படுவதாக நினைக்கும் கார்த்திக் கோபத்தில் போனை கட் செய்து விடுகிறான்.  அடுத்து வரும் வழியில் பிரியா பிய்ந்து போன செருப்புடன் நிற்க, வழியில் என்னை டிராப் செய்யுங்கள் என்று பிரியா சொல்கிறாள். 

meenaksh

மேலும் படிக்க | கிரைம், திரில்லராக உருவான “அரணம்” திரைப்படதின் இசை வெளியீட்டு விழா

வேறு வழியின்றி கார்த்திக் அவளை தன் பைக்கில் அழைத்துப் போகிறான். அதை யமுனா பார்த்து விடுகிறாள். இதனால் டென்ஷன் ஆகிறாள். பிரியா வேண்டுமென்றே கார்த்திக்கின் மேல் கை வைத்துக் கொண்டு பைக்கில் போக யமுனா அதிர்ச்சியாகிறாள். பூஜா பிரியாவுக்கு போன் செய்து நாளை காலை 9:00 மணிக்கு கோவிலில் இருக்க வேண்டும், கார்த்திக்கும் வருவான், யமுனாவும் வருவாள் என்று சொல்லுகிறாள். ரங்கநாயகி கோகிலாவிடம் நாளை காலை கார்த்திக்கை 9 மணிக்கு கோவிலுக்கு அனுப்புங்கள் என்று சொல்கிறாள்.  

இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதவாது, இவை அனைத்தும் ரங்கநாயகி, பூஜா மற்றும் கோகிலா ஆகியோரின் கூட்டு சதி என்பதை அறியாத யமுனா கோவிலில் வைத்து கார்த்திக்கிடம் சத்தம் போடுகிறாள். இதனால் கார்த்திக் கோபமாகி யமுனாவை பிடித்து தள்ளி விட்டு அங்கிருந்து வெளியேற அதை பார்த்து ரங்கநாயகி, பூஜா ஆகியோர் சந்தோஷமடைகின்றனர்.

அடுத்ததாக வீட்டிற்கு வரும் யமுனா இரவில் தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள். மீனாட்சியும் துர்காவும் அவளை காப்பாற்றுகிறார்கள். பிறகு மீனாட்சி யமுனாவிடம் என்னாச்சு என்ற விசாரிக்க யமுனா, கார்த்திக் வேறு பெண்ணுடன் சுற்றுகிறான் என்று நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்ல, இதை கேட்டு அதிர்ச்சி அடையும் மீனாட்சி நான் இதை சரிசெய்கிறேன் என்று சொல்கிறாள்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தலைவர் 171 படம் இப்படி தான் இருக்கும் - லோகேஷ் கனகராஜ் கூறிய பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News