வறுத்தெடுத்த நெட்டிசன்கள்... உருக்கமாய் பதிவிட்ட குக் வித் கோமாளி நடுவர்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான செஃப் வெங்கடேஷ் பட் தனது முகநூல் பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 30, 2022, 03:20 PM IST
  • குக் வித் கோமாளி நிகழ்ச்சியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
  • வெங்கடேஷ் பட் உருக்கமான பதிவு
வறுத்தெடுத்த நெட்டிசன்கள்... உருக்கமாய் பதிவிட்ட  குக் வித் கோமாளி நடுவர் title=

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது மூன்றாவது சீசன் நடந்துவருகிறது. செஃப் வெங்கடேஷ் பட் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ், அஷ்வின், சிவாஞ்கி உள்ளிட்டோர் பிரபலமடைந்தனர்.

அவர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்துவருகின்றன. புகழ் தற்போது ஹீரோவாகவும் நடித்துவருகிறார். திரையுலகத்தி பிரபலமடைந்தாலும் புகழ், சிவாங்கி உள்ளிட்டோர் நிகச்சியின் மூன்றாவது சீசனிலும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

CWC

இந்நிலையில் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த ப்ரோமோவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டுவிட்டதாக ஒருவர் கூறியதாக புகழ் தெரிவித்தார்.

அதேபோல் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட், “குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து ஒரு தம்பதிக்கு குழந்தை பிறந்தது” என்றார்.

CWC

வெங்கடேஷ் பட் கூறியது நெட்டிசன்களால் ட்ரோல் மெட்டீரியலாக ஆக்கப்பட்டது. பலரும் , குக் வித் கோமாளி நிகழ்ச்சியை வைத்தும், வெஙக்டேஷ் பட்டையும் வைத்து மீம்ஸ்களையும் உருவாக்கினர்.

அதேசமயம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தும் சில பதிவுகள் உலா வந்தனர். இந்தச் சூழலில் வெங்கடேஷ் பட் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அந்தப் பதிவில், “இரண்டு நாள்கள் நிஜமாகவே உடைந்து போனேன்.கவலையாக இருந்தது. என்னை ட்ரோல் செய்ததால் கவலைப்படவில்லை. மனிதநேயம் செத்துவிட்டதாக  மீம்ஸ்கள் என்னை உணரவைத்தது. எது வேண்டுமானாலும் சாகலாம் ஆனால் மனிதாபிமானம் இல்லை. கடவுள் இருக்கார்ர குமாரு.

மேலும் படிக்க | தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட லெஜெண்ட் சரவணன்!

நல்லவர்கள் இன்னும் இவ்வுலகில் இருக்கிறார்கள்.கீழே உள்ள படம் இப்போது தேசிய அளவில் ட்ரெண்டாகிவருகிறது.அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி...

 

குழந்தை செல்வம் உள்ளவர்களுக்கே தெரியும் அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று.குழந்தை இல்லாதவர்களை யோசித்து பாருங்கள். என்னை கிண்டல் செய்கிறேன் என நினைத்து உங்களை நீங்களே தரம் தாழ்த்துக்கொள்ளாதீர்கள் என மீம்ஸ் க்ரியேட்டர்ஸிடம் கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கும் மனம் முடிந்து 7 ஆண்டுகள் கழித்து கிடைத்த செல்வம் என் குழந்தை.ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமானதை நான் உணர்ந்தவன்” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க |கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News