பயந்த சுபாவமா இருந்தா பாக்காதீங்க: முதலை வாயில் கை.. தப்பித்ததா? துண்டானதா?

Crocodile Attack Video: பார்த்தவுடன் மனதை பதற வைக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்த இணையவாசிகள் ஷாக்கில் இருக்கிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 23, 2022, 05:09 PM IST
  • வாயை திறந்து காத்திருந்த முதலை.
  • முதலை வாயில் கை வைத்த நபர்.
  • வைரலான வீடியோ.
பயந்த சுபாவமா இருந்தா பாக்காதீங்க: முதலை வாயில் கை.. தப்பித்ததா? துண்டானதா? title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

முதலைகளின் பல ஆச்சரியமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. சில நேரங்களில் அவை மனிதர்களை தாக்குவதையும், சில நேரங்களில் நீருக்கடியில் அவற்றின் விந்தையான உலகையும் நாம் இந்த வீடியோக்களில் பார்த்துள்ளோம். தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோ காண்பவர்களை கதிலகலங்க வைத்துள்ளது. இதில் முதலைகளிடம் நீண்ட நாட்களாக பழகியவர் போல் காட்சியளிக்கும் ஒருவர், அதன் வாயில் கையை வைத்து மாட்டிக்கொள்கிறார். 

வாயை திறந்து காத்திருந்த முதலை

 வீடியோவில், தண்ணீர் நிரம்பிய குளத்தின் அருகே முதலையின் முன் ஒரு மனிதன் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. ஆச்சரியம் என்னவென்றால், அந்த முதலை தன் வாயை பெரிதாக திறந்துவைக்கிறது. இந்த வீடியோவை பார்த்தால் அந்த நபர் பலருக்கு முன் முதலையுடன் சேர்ந்து கேளிக்கைக்காக வேடிக்கை செய்வதுபோல் தெரிகிறது. 

மேலும் படிக்க | யானையிடம் கேவலமாக பல்பு வாங்கிய சிங்கம்: வீடியோ வைரல் 

முதலை வாயில் கை வைத்த நபர்

அந்த நபர் முதலையின் முன் செல்லும்போது, ​​அவர் முதலில் அதன் வாயில் ஒரு குச்சியை விட்டு ஆழம் பார்க்கிறார். ஆனால், பின்னர் பயம் இல்லாமல் அதன் தாடையில் தனது கையை வைக்கிறார். முதலில் முதலை எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்கிறது. ஆனால் அதன் பின் நடப்பதை பார்த்தால் நம்மால் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது. 

அந்த நபரும் அதிர்ந்துபோனார்

ஆபத்தான முதலை அந்த நபரின் கையை தனது வாயால் முழுமையாகப் பிடித்தது. கடுமையாக போராடி எப்படியோ அவர் தன் கையை முதலையிடமிருந்து விடுவித்துக்கொண்டார். ஆனால், அதற்குள் அவருடைய ரத்தம் தரையில் சிந்திவிடுவதை வீடியோவில் காண முடிகின்றது. இதையடுத்து அந்த நபர் உடனடியாக அங்கிருந்து சென்று விட்டார். 

மனதை பதற வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Earth Reels (@earth.reel)

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'earth.reel' என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. அதன் வீடியோ வைரலாகியுள்ளது. இதற்கு பல வித வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | அச்சு அசல் மனிதனை போலவே நிற்கும் 20 அடி நீள பாம்பு: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News