பாம்பு எங்கு பூந்து போகுதுனு கூட தெரியாம ஜாலி பண்ணும் தாத்தா.. வீடியோ வைரல்

வைரலாகி வரும் இந்த வீடியோவில், வயதான ஒருவர் மீது பாம்பு ஏறியபோது படகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 7, 2023, 07:26 PM IST
  • தாத்தா மீது பாம்பு ஏறிய வீடியோ வைரல்.
  • தாத்தா படகில் இருந்து கீழே குதிக்கிறார்.
பாம்பு எங்கு பூந்து போகுதுனு கூட தெரியாம ஜாலி பண்ணும் தாத்தா.. வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: தற்போது பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக த்தையே இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்தளத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.

பொதுவாக பாம்புகள் இணையத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிகமுக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், மக்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இதனாலே பாம்புகள் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக காட்டுகிறோம். இந்நிலையில் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வெகுவாக வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க | மடி மீது முதலை..கழுத்தில் பாம்பு..ஆபத்துடன் விளையாடும் சிறுவன்! வைரல் வீடியோ!

தாத்தா மீது பாம்பு ஏறியது:
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு தாத்தா ஆற்றில் படகில் எப்படி ஓய்வெடுக்கிறார் என்பதை நீங்கள் பார்க்கலாம். அவர் முழு வேடிக்கையான மனநிலையில் இருப்பதாகத் தெரிகிறது. மேலும் கண் கண்ணாடி மற்றும் தொப்பி அணிந்துள்ளார். இப்போது திடீரென்று ஒரு பாடலைப் பாடத் தொடங்குகிறார். பாடும் போது முன்னாலும் பின்னாலும் என்ன நடக்கிறது என்பது கூட அவருக்கு தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து, ஒரு பாம்பு படகில் ஏறுகிறது, ஆனால் தாத்தா அதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறார். சிறிது நேரத்துல பாம்பு காலில் ஏற தாத்தா அதை பார்த்தவுடனே துள்ளிக்குதிக்கிறார்.

பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raha Rima (@raha_rima01)

வைரலான வீடியோ:
பாம்பை பார்த்ததும் பயந்த தாத்தா படகில் இருந்து கீழே குதிப்பதை காணொளியின் இறுதியில் காணலாம். அந்த இடத்தில் உருவான காட்சியைப் பார்த்து அனைவரும் சிரிக்கிறார்கள். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் raha_rima01 என்ற கணக்கிலிருந்து வெளியிடப்பட்டது. மேலும் இதுவரை வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | முட்டை பொரி சாப்பிடுபவர்கள் உடனே இந்த வீடியோவை பாருங்கள்.. அதிர்ச்சி தரலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News