)
ஜோதிடத்தின் படி, பல ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். கிரகங்களின் ஏற்படும் மாற்றம் இந்த மாதம் சாதகமான பலனைத் தாகரும். ஒரு சில ராசிகளைத் தவிர, மீதமுள்ள ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் மிகவும் மங்களகரமானவராக இருக்கும். ஏனெனில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன், சூரிய பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். இந்த மாற்றத்தால் 5 ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். எனவே, அந்த 5 ராசிகளைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
சூரிய பகவான் தற்போது கடக ராசியில் அமர்ந்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 வரை சூரிய பகவான் இந்த ராசியில் தான் இருப்பார். மறுநாள் அதாவது ஆகஸ்ட் 16 ஆம் தேதி சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைவார். இதற்கு முன்னதாக ஜூலை 19 ஆம் தேதி சூரிய பகவான் பூச நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை சூரிய பகவான் இந்த ராசியில் இருப்பார். ஆகஸ்ட் 02 ஆம் தேதி இரவு 10.15 மணிக்கு சூரிய பகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவார். இந்நிலையில் சூரிய பகவான் நாளை அதாவது ஜூலை 19 ஆம் தேதி இரவு 11.21 மணிக்கு பூச நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார்.
மேஷம்: மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் அதிர்ஷ்ட மாதமாக அமையப் போகிறது. இந்த காலகட்டத்தில், மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பு நிதி நன்மைகள் கிடைக்கும். வியாபாரத்திலும் ஏற்றம் உண்டாகும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். சூரிய கடவுள் தொழிலில் சிறப்பான பலனைத் தருவார். எனவே, சூரியனால் மிதுன ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். சம்பளமும் உயரும். தொழிலில் புதிய முயர்ச்சிகளை எடுப்பீர்கள். அதில் வெற்றி பெறுவீர்கள்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் இருக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது புதிய பொறுப்புகளை பெறலாம். வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள், ஆன்மீக பயணத்திற்கு வாய்ப்பு உண்டு.
கன்னி: ஜோதிடத்தின் படி, ஆகஸ்ட் 16 வரை கன்னி ராசியின் வருமான வீட்டில் சூரியபகவானின் பார்வை இருக்கப் போவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு அனுகூல பலன் கிடைக்கும். நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையும். முதலீடு செய்வது சாதகமாக இருக்கும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும. வியாபாரத்தில் ஏற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தலாம். இதனால் லாபம் பெருகும். கஷ்டங்கள் நீங்கும். மனதில் நிம்மதியும், உற்சாகமும் பெருகும். பிறருக்கு உதவும் மனப்பான்மை அதிகரிக்கும்
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ