தீபாவளி 2022 லட்சுமி குபேர பூஜை: எப்போது எந்த முறையில் செய்ய வேண்டும்?

Diwali 2022: தீபாவளியன்று தீபாவளி பண்டிகை, கேதார கௌரி விரதம், அம்மாவாசை, லட்சுமி குபேர பூஜை என பல பூஜைகள் இருப்பதால், எதை எப்போது செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 19, 2022, 07:09 PM IST
  • இருளை போக்கி ஒளியை பரவச்செய்யும் தீபாவளி பண்டிகை அனைவருக்கும் பிடித்தமான பண்டிகையாகவும் உள்ளது.
  • தீபாவளிக்கு முந்தைய நாள், அதாவது அக்டோபர் 23 ஆம் தேதி, தன்தேரஸ் கொண்டாடப்படுகின்றது.
  • தீபாவளி அன்று செய்யும் லட்சுமி குபேரன் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
தீபாவளி 2022 லட்சுமி குபேர பூஜை: எப்போது எந்த முறையில் செய்ய வேண்டும்?  title=

தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நமது நாட்டில் பல வகையான திருவிழாக்களும் பண்டிகைகளும் கொண்டாடப்பட்டாலும், தீபாவளிக்கு என்றுமே தனிச்சிறப்பு உண்டு. இருளை போக்கி ஒளியை பரவச்செய்யும் தீபாவளி பண்டிகை அனைவருக்கும் பிடித்தமான பண்டிகையாகவும் உள்ளது. உறவுகளும், நண்பர்களும் ஒன்று சேர்ந்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகளை உட்கொண்டு, பட்டாசு கொளுத்தி இந்த நாளை நாம் கொண்டாடுகிறோம். 

தீபாவளிக்கு முந்தைய நாள், அதாவது அக்டோபர் 23 ஆம் தேதி, தன்தேரஸ் கொண்டாடப்படுகின்றது. தென் இந்தியாவில் இது அவ்வளவாக பழக்கத்தில் இல்லை என்றாலும், வட இந்தியாவில் இந்த நாளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. நீண்ட ஆயுள், மகிழ்ச்சி, செல்வம் ஆகியவை எப்போதும் நிலைத்திருக்கவும், பன்மடங்காக பெருகவும் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில், தானம் செய்வதும், நம்து அன்றாட தேவைகளுக்கான பொருட்கள், தங்கம், வெள்ளி, கல் உப்பு ஆகியவற்றை வாங்குவது சுபமாக கருதப்படுகின்றது. தன்தேரஸ் அன்று தன்வந்திரி பகவானையும் லட்சுமி தேவியையும் வணங்கி கொண்டாடுகிறோம்.

தென் இந்தியாவில், நரகாசுரன் மீது கண்ணன் பெற்ற வெற்றியை தீபாவளியாக கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் ராவணனை வதம் செய்துவிட்டு ராமர் அயோதிக்கு திரும்பிய நாளை தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். தீபாவளி சமயத்தில் கேதார கௌரி விரதம் இருப்பது வழக்கம். இந்தியா முழுவதும் தீபாவளி நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது சமீக ஆண்டுகளில் பிரபலமாகி வருகிறது. 

மேலும் படிக்க | தீபாவளிக்கு அடுத்த நாள் சூரிய கிரகணம்: இந்த ராசிகளுக்கு நெருக்கடி, எச்சரிக்கை தேவை

தீபாவளியன்று தீபாவளி பண்டிகை, கேதார கௌரி விரதம், அம்மாவாசை, லட்சுமி குபேர பூஜை என பல பூஜைகள் இருப்பதால், எதை எப்போது செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகும்.

- தீபாவளிக்கு முந்தைய நாள் நாம் ராப்பண்டிகை கொண்டாடுகிறோம். அன்றும் பலவித பலகாரங்களை செய்து படைத்து பட்டாசு கொளுத்தி தீபாவளிக்கு ஆயத்தமாகிறோம்.

- தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து, தீபாவளிக்காக செய்த பலகாரங்கள், நல்லெண்ணெய், சீயக்காய், கங்கை ஜலம் (அன்றைய நாளில் அனைத்து நீரும் கங்கை நீராகவே பார்க்கப்படுகிறது), பட்டாசுகள், புத்தாடைகள் என அனைத்தையும் இறைவனுக்கு படைத்து, புஷ்பம், அட்சதை ஆகியவற்றால் அர்ச்சனை செய்து, கற்பூரம் ஏற்றி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். 

- காலையில் கேதார கௌரி விரதத்தையும் மாலையில் லட்சுமி குபேர பூஜையையும் செய்ய வேண்டும்.

லட்சுமி குபேர பூஜை:

தீபாவளி அன்று செய்யும் லட்சுமி குபேரன் பூஜை மிகவும் சிறப்புவாய்ந்தது. குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்றபோது லட்சுமி தேவியை வணங்கி குபேர எந்திரத்தைப்  பெற்றார். ஐப்பசி மாதம் வரும் அமாவாசை திதியில், மாலை நேரத்தில் மகாலட்சுமியை பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைத்து அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என சிவபெருமான் குபேரனுக்கு கூறிய அறிவுரையின் பேரில் குபேரன் லட்சுமியை வணங்கி செல்வங்களை பெற்றார். அந்த நாள்தான் தீபாவளித் திருநாளாக கொண்டாடப்படுகின்றது. 

ஆகையால் இந்த நாளில், நாமும் செல்வத்தின் அட்சய பாத்திரமாக விளங்கும் குபேரரையும், அந்த செல்வத்தை அவருக்கு அளித்த மகாலட்சுமியையும் வணங்கி இந்த பூஜையை செய்தால், வீட்டில் செல்வம் பெருகும், கடன்கள்  தீரும் என ஐதீகம்.

லட்சுமி குபேர பூஜையை எவ்வாறு செய்ய வேண்டும்?

லட்சுமி குபேர பூஜை செய்யும்போது, லட்சுமி குபேரரின் படத்தை எடுத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜைக்கான இடத்தில் வைக்கவும். கலசம் கொண்டு பூஜை செய்பவர்கள், கலசத்தில் தண்ணீர் ஊற்றி, அதோடு பன்னீர், வாசனை பொருட்கள், மஞ்சள், எலுமிச்சை கலந்து, அதில் மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து, அதை சுற்றி மாவிலை வைக்க வேண்டும். இந்த கலசத்தை வாழை இலையில் அரிசி பரப்பி அதன் மீது வைக்க வேண்டும். 

பல வகையான மலர்கள், அட்சதை, குங்குமம் கொண்டு லட்சுமி குபேர ஸ்தோத்திரங்கள், மகாலட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீசுக்தம் ஆகியவற்றை பாராயணம் செய்து பூஜை செய்ய வேண்டும். பின்னர், பாயசம், வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து, கற்பூரம் காட்ட வேண்டும். 

பூஜை செய்ய ஏற்ற நேரம் எது?

இந்த ஆண்டு தீபாவளியன்று மாலையில்தான் அமாவாசை திதி துவங்குகிறது. ஆகையால் ஜோதிட கணக்கீடுகளின்படி, மாலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணிக்குள் எப்போது வேண்டுமானாலும், லட்சுமி குபேர பூஜையை செய்யலாம்.

மேலும் படிக்க | தீபாவளி பற்றி காலம் காலமாக கூறப்பட்ட இந்த விஷயங்கலாம் பொய்யா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News