சூரியன் புதன் சேர்க்கையால் உருவாகும் புத ஆதித்ய யோகம்: இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்

Budhaditya Yogam of Surya-Budh: புத ஆதித்ய யோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த காலத்தில் இவர்கள் நல்ல பண வரவையும், தொழிலில் வெற்றியையும் பெறுவார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 17, 2022, 06:21 PM IST
  • ரிஷப ராசிக்காரர்கள் புத ஆதித்ய யோகத்தால் மகத்தான பலன்களை அடைவார்கள்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
  • செலவுகள் கூடும், ஆனால் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்காது.
சூரியன் புதன் சேர்க்கையால் உருவாகும் புத ஆதித்ய யோகம்: இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம் title=

கன்னி ராசியில் புதாதித்ய யோகம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் தங்கள் நிலைகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று செப்டம்பர் 17ம் தேதி சூரியன் கன்னி ராசியில் பிரவேசித்துள்ளார். சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிகளிலும் இருக்கும். சில ராசிகள் சுப பலன்களையும் சில ராசிகள் அசுப பலன்களையும் பெறுவார்கள். மேலும், சூரியன் கன்னி ராசியில் நுழைவதால் கன்னி ராசியில் புத ஆதித்ய யோகம் உருவாகி வருகிறது.

ஜோதிடத்தின் படி, செப்டம்பர் 11 அன்று, புதன் கிரகம் கன்னி ராசியில் வக்ரமானது. ஆகையால், சூரியன் கன்னியில் நுழைவதற்கு முன்பே புதன் அங்கே அமர்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த ராசியில் புத ஆதித்ய யோகம் உருவாகி வருகிறது. இந்த யோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த காலத்தில் இவர்கள் நல்ல பண வரவையும், தொழிலில் வெற்றியையும் பெறுவார்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் புத ஆதித்ய யோகத்தால் மகத்தான பலன்களை அடைவார்கள். இந்த நேரத்தில், வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். செலவுகள் கூடும், ஆனால் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்காது. நீங்கள் வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு இதுவே சிறந்த நேரமாக இருக்கும். 

மேலும் படிக்க | சூரியனின் ராசி மாற்றம்: இன்று முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், இன்ப ஒளி வீசும் 

பணியிடத்தில் மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். நீங்கள் ஏதேனும் புதிய வேலையைத் தொடங்க நினைத்தால் அதற்கும் இது சாதகமான நேரமாக இருக்கும். இது முதலீடு செய்வதற்கு சிறப்பான நேரம். வியாபாரம் விரிவடையும். கூட்டாண்மையில் வேலை செய்வதால் பெரிய லாபம் கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இக்காலம் சிறப்பான காலமாக இருக்கும். இந்த நேரத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல செயல்திறன் இருக்கும். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். வேலை சம்பந்தமாக வெளி நாடுகளுக்கு செல்ல நேரிடலாம். 

இந்த காலகட்டத்தில் லாபத்திற்கான முழு சாத்தியமும் உள்ளது. கடின உழைப்பின் முழு பலன் கிடைக்கும். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். நீங்கள் புதிய வேலைகளைச் செய்ய நினைத்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் உதவியால் அனைத்து வேலைகளிலும் பெரிய வெற்றி கிடைக்கும்.

மீனம்:

இந்த காலகட்டத்தில் மீன ராசிக்காரர்களுக்கு நிலைமை வலுவாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். இந்த காலத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகம் போன்றவற்றில் புகழ் பெறுவீர்கள். மேலதிகாரி உங்கள் பணியால் மகிழ்ச்சி அடைவார். பிறருடன் சேர்ந்து செய்யும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு இந்த நேரம் நல்ல நேரமாக இருக்கும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரனின் மாற்றத்தால் கண்களின் கண்ணீர் வரும்! சிலருக்கு ஆனந்தக் கண்ணீர்! ஆனால் பலருக்கு???

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News