இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது? ஆன்மிகம் கூறும் பதில் இதுதான்!

பெரியவர்கள், இருட்டிய பிறகு நகம் வெட்டகூடாது என்று கூறுவர். அப்படி செய்வதால் என்ன நடக்கும்? இங்கே பார்ப்போம். 

Written by - Yuvashree | Last Updated : Dec 27, 2023, 05:43 PM IST
  • இரவில் பலர் நகம் வெட்டக்கூடாது என கூறுவர்.
  • இதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன.
  • ஆன்மிகம் கூறும் பதில் என்ன?
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது? ஆன்மிகம் கூறும் பதில் இதுதான்! title=

தமிழ் நாட்டில் மட்டுமன்றி, இந்தியாவின் பல மாநிலங்களிலும், ஏன் பல்வேறு நாடுகளிலும் கூட இரவிலோ அல்லது சூரியன் மறைந்த பிறகோ நகம் வெட்டும் பழக்கத்தினை பலர் வைத்துக்கொள்வதில்லை. இதற்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தினை கூறுவர். அப்படி, பொதுவாக கூறப்படும் ஐந்து காரணங்களை இங்கு பார்ப்போம் வாங்க. 

ஆன்மிக நம்பிக்கை:

அன்மிக ரீதியாக இரவில் நகம் வெட்டக்கூடாததற்கு விளக்கங்கள் இருந்தாலும், பொதுவாக கூறப்படும் சில கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, இரவில் துர்ஷ்ட சக்திகள் பல உலாவும் எனவும் இதனால் இரவில் நகத்தை வெட்டும் போது அந்த சக்திகளை நாம் ஈர்க்க கூடும் என்றும் கூறப்படுகிறது. நகம் வெட்டுவது என்பது, நம்மிடம் இருக்கும் ஒரு விஷயத்தை தனியே வெட்டி எடுப்பது போன்றதாகும். எனவே, இரவில் நகத்தை வெட்டுவதால் துரதிர்ஷ்டத்தை நம் பக்கம் ஈர்த்துவிடுவோம் என்று கூறப்படுகிறது.

இந்து புராணம் மற்றும் ஆயுர்வேதத்தில் இடம் பெற்றுள்ள விளக்கங்கள்:

இந்து புராணம் மற்றும் ஆயுர்வேதத்தை பொறுத்தவரையில் நகத்தை கட்டுவது நல்ல ஆற்றல்களுடன் தொடர்புடையதாக உள்ளதாம். இதை நிலவின் ஆற்றலுடனும் பலர் தொடர்பு படுத்தி கொள்கின்றனர். நிலவின் ஆற்றல் அமைதியை அளித்து, குழப்பத்தை நீக்கும் வகையில் இருக்குமாம். ஆயுர்வேதத்தை பொறுத்தவரை நிலவின் ஆற்றல் இரவில்தான் அதிகமாக இருக்குமாம். அதனால், இரவில் நகம் வெட்டுவதால் இந்த ஆற்றலை கெடுக்க கூடும் என கூறப்படுகிறது. இது, நமது ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதிக்க வாய்ப்புள்ளதாம். 

மேலும் படிக்க | இன்று 3 பரிகாரங்களைச் செய்தால் போதும்! லட்சுமி தேவி ஆசி கிடைக்கும்!

சுகாதாரம் மற்றும் தூய்மை:

மாலையில் நகம் வெட்டுவதைத் தவிர்ப்பதற்குப் பின்னால் உள்ள மற்றொரு நடைமுறைக் காரணமும் உள்ளது. அது, சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பானதாகும். நம் கைகள் மற்றும் கால்கள் நாள் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து தொடர்பு கொள்கின்றன, நமது நகங்களின் கீழ் அழுக்கு, கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் குவிகின்றன. கை கழுவாமல் மாலையில் நகங்களை வெட்டுவது, நம் முகத்தையும் வாயையும் அடிக்கடி தொடுவதால், இந்த தீங்கு விளைவிக்கும் ஏதேனும் பாதிப்புகள் நம் உடலில் வரும் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே, காலை வரை காத்திருந்து கை, கால்களை சுத்தமாக கழுவிய பிறகு நகத்தை வெட்டலாம். 

கலாச்சார மரபுகள்:

சில கலாச்சாரங்களில், மாலையில் நகங்களை வெட்டுவது ஒழுக்கக்கேடான அல்லது அவமரியாதையான செயலாக கருதப்படுகிறது. நகம் வெட்டும் சத்தம், குறிப்பாக இரவில், ஆவிகள், முன்னோர்கள் அல்லது வீட்டு தெய்வங்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், ஓய்வெடுக்க அல்லது தூங்க முயற்சிக்கும் மற்றவர்களுக்கு இந்த ஒலி அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். கலாச்சார மரபுகளைப் பராமரிக்கவும், மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் இருக்கும் வகையிலும், அவர்களுக்கான நமது மரியாதை காட்டவும், மக்கள் மாலை நேரத்திற்குப் பிறகு தங்கள் நகங்களை வெட்டுவதைத் தவிர்க்கிறார்கள்.

நடைமுறை காரணம்:

மாலையில் நகங்களை வெட்டுவதைத் தவிர்ப்பதை ஆதரிக்கும் வகையில் சில காரணங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, குறைந்த வெளிச்சத்தில் நகங்களை வெட்டுவது ஆபத்தானதாக கருதப்படுகிறது. ஏனெனில் போதுமான வெளிச்சம் இல்லாததால், தற்செயலாக நாம் எங்காவது வெட்டு போட்டுக்கொள்ள வாய்ப்புண்டு.  இதனால் காயங்களும் ஏற்படலாம். 

மேலும் படிக்க | செவ்வாய்க்கிழமையில் கடன் வாங்கவே கூடாது! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News