IND vs PAK: பாகிஸ்தானை பாயாக சுருட்டிய குல்தீப்... மிரட்டும் இந்திய பந்துவீச்சு - நாளை இலங்கையுடன்!

IND vs PAK: ஆசிய கோப்பையின் சூப்பர்-4 சுற்றில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Sep 11, 2023, 11:31 PM IST
  • நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப் ஆகியோர் காயம் காரணமாக பேட்டிங் செய்யவில்லை.
  • குல்தீப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.
IND vs PAK: பாகிஸ்தானை பாயாக சுருட்டிய குல்தீப்... மிரட்டும் இந்திய பந்துவீச்சு - நாளை இலங்கையுடன்! title=

IND vs PAK: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொழும்புவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் இந்திய ஓப்பனர்கள் ரோஹித் - கில் ஆகியோர் களமிறங்கி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். 

அந்த வகையில், 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை இந்தியா எடுத்தபோது ஆட்டம் தடைபட்டது. மழை நேற்று தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் இன்று தள்ளிவைக்கப்பட்டது. ரிசர்வ் டே ஆன இன்று ஆட்டம் நேற்று நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்தே தொடங்கியது. இதில், விராட் கோலி - ராகுல் ஆகியோர் களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடர்ந்து, ஒருநாள் வடிவில் விராட் கோலி தனது 47ஆவது சதத்தையும், ராகுல் 6ஆவது சதத்தையும் பதிவு செய்தனர். 

இதனால், 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 356 ரன்களை எடுத்தது. கோலி 122 ரன்களுடனும், ராகுல் 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷதாப் கான், ஷாகின் அப்ரிடி ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சில் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 357 ரன்கள் என்ற மாபெரும் இலக்குடன் ஃபகார் ஜமான் மற்றும் இமாம் உல்-ஹக் ஆகியோர் களமிறங்கினர்.

மேலும் படிக்க | ஆசிய கோப்பை 2023: இரண்டு முறையும் டிஆர்எஸ் தவறாக எடுத்த பாகிஸ்தான் அணி

இந்த ஜோடியை பும்ரா அற்புதமாக பிரித்தார். இமாம் 9 ரன்களுக்கு வெளியேற அடுத்த கேப்டன் பாபர் களமிறங்கினார். 11ஆவது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியா தனது மூன்றாவது பந்திலேயே பாபர் அசாமை போல்டாக்கி வெளியேற்றினார். அவர் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அப்போது மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் கழித்து ஓவர்கள் குறைக்கப்படாமல் மீண்டும் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே ஷர்துல் பந்துவீச்சில் ரிஸ்வான் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அடுத்து குல்தீப் பந்துவீச வந்தார். அவரின் இரண்டாவது ஓவரிலேயே செட்டில் பேட்டர் ஃபகார் ஜமான் விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து, சல்மான், ஷதாப் கான், இஃப்திகார், அஷ்ரப் என சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்தி குல்தீப் ஆட்டத்தை முடித்துவைத்தார். அதாவது, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா ஆகியோர் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை. எனவே, இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 32 ஓவர்களில் பாகிஸ்தான் 128 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதன்மூலம், இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். 

சூப்பர் 4 சுற்றின் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், இலங்கை இரண்டாமிடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் மூன்றாம் இடத்தில் உள்ளது. வங்கதேசம் கடைசி இடத்தில் உள்ளது. இதில், முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் செப். 17ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவார்கள் என்பது நினைவில் கொள்ள வேண்டும். 

இந்திய அணி நாளை (செப். 12) இலங்கையுடன் மோத உள்ளது. இதே மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு ஆட்டம் நடைபெறும். இந்திய அணி நேற்று, இன்று, நாளை என தொடர்ந்து விளையாட உள்ளது. நாளைய போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது. எனவே, நாளைய போட்டியில் மழை குறுக்கிட்டால் இரு அணிக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்படும்.  

மேலும் படிக்க | சென்னையில் உலகக் கோப்பை டிக்கெட் கிடைப்பதில் ஏன் இவ்வளவு கஷ்டம் - இது தான் காரணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News