IPL 2024: சம்பளம் குறைவாக இருந்ததால் ஐபிஎல் 2024ஐ புறக்கணித்த வீரர்கள்!

IPL 2024: ஐபிஎல் தொடரில் குறைவான தொகைக்கு ஏலம் போன சில வீரர்கள் ஐபிஎல் 2024ஐ புறக்கணித்துள்ளனர்.  இதனால் அணி நிர்வாகம் மிகுந்த வருத்தத்தில் உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 11, 2024, 06:31 AM IST
  • ஐபிஎல்லை புறக்கணித்த வீரர்கள்.
  • சம்பளம் குறைவாக உள்ளதால் புறக்கணித்து உள்ளனர்.
  • அணி நிர்வாகம் இதனால் வருத்தத்தில் உள்ளது.
IPL 2024: சம்பளம் குறைவாக இருந்ததால் ஐபிஎல் 2024ஐ புறக்கணித்த வீரர்கள்! title=

ஐபிஎல் 2024 தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்றது.  இதில் பல வெளிநாட்டு வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து இருந்தனர். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து பல இளம் வீரர்களும் முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து இருந்தனர். இதில் பலர் ஏலத்தில் நல்ல விலைக்கு எடுக்கப்பட்டனர். சில வீரர்களை எந்த அணிகளும் வாங்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் கூட ஏலத்தில் எடுக்கப்படாமல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 
அதே சமயம் பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் போன்ற வீரர்கள் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

மேலும் படிக்க | RR vs GT: கடைசி ஓவர் பரபரப்பு! திரில் வெற்றி பெற்ற குஜராத் அணி!

இந்நிலையில், ஏலத்தில் கம்மி விலையில் எடுக்கப்பட்ட சில வீரர்கள் ஐபிஎல் 2024ல் விளையாடாமல் புறக்கணித்து உள்ளனர். அடிப்படை விலை அல்லது மிகவும் கம்மியான விலையில் ஏலத்தில் எடுக்கப்பட்டதால் ஐபிஎல்லை புறக்கணித்து உள்ளனர் என்று கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் வீரர்கள் தங்கள் பெயர்களை திரும்பப் பெறுவது சில உரிமையாளர்களை கவலையடைய செய்துள்ளது. ஏலத்தில் அவர்களை நம்பி எடுத்து, கடைசியில் அவர்கள் விளையாடாமல் போவது அணியின் ஒட்டுமொத்த திட்டமிடலை பாதிக்கிறது என்று கூறியுள்ளனர். சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி இருந்தாலும், குறைவான தொகைக்கு ஏலம் போனதால் ஐபிஎல்லை புறக்கணித்த வீரர்களை பற்றி பார்ப்போம். 

ஆடம் ஜம்பா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர் ஆடம் ஜம்பாவை ரூ. 1.5 கோடி ரூபாய்க்கு எடுத்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் 2023 சீசனில் அவர் விளையாடினார். ஆனால் இந்த ஆண்டு சில தனிப்பட்ட காரணங்களால் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஐபிஎல் 2024ல் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்துள்ளார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

வனிந்து ஹசரங்கா: ஐபிஎல் 2024ல் இருந்து இலங்கை அணியின் டி20ஐ கேப்டன் வனிந்து ஹசரங்கா கடைசி நேரத்தில் விலகினார். சன்ரைசஸ் ஹைதராபாத் அணி அவரை ரூ. 1.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால் ஹசரங்காவுக்கு ஒருசில மாதங்களுக்கு முன்னர் காயம் ஏற்பட்டது.  மேலும் இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் விளையாட ஐபிஎல்லை புறக்கணித்துள்ளார்.  

ஜேசன் ராய்: இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் கடைசி நேரத்தில் ஐபிஎல்லில் இருந்து விலகுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஜேசன் ராய் கடந்த சீசனில் கொல்கத்தா அணியில் விளையாடினார். ஆனால் இந்த ஆண்டு அணியில் இருந்து விலகி உள்ளார்.  அவருக்கு பதிலாக கொல்கத்தா அணியில் பில் சால்ட் விளையாடி வருகிறார்.

கஸ் அட்கின்சன்: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பணிச்சுமை மேலாண்மைக்காக சில வீரர்களை ஐபிஎல் விளையாட அனுமதிக்கவில்லை. ஆனால் கஸ் அட்கின்சன் ஐபிஎல்லில் ரூ. 1 கோடிக்கு ஏலம் போனதால் இந்த ஆண்டு அவர் விளையாடவில்லை. அதே சமயம் 18.5 கோடி எடுக்கப்பட்ட சாம் குர்ரன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

மேலும் படிக்க | சிஎஸ்கேவின் சூப்பர் ஹீரோ, அவரு போடும் ஸ்கெட்ச் மிஸ் ஆகாது! கேமரா முன்னால் அதிகம் வரமாட்டார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News