தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது!! அமைச்சர் ஆய்வு!!

Last Updated : Mar 2, 2017, 12:30 PM IST
தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது!! அமைச்சர் ஆய்வு!! title=

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்கி மார்ச் மாதம் 31-ம் தேதி வரையில் நடக்க உள்ளது. 

இந்த தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். பிளஸ்-2 தேர்வை 6,737 பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 மாணவர்களும், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும், தனித்தேர்வர்களாக 31 ஆயிரத்து 843 பேரும், சிறைக்கைதிகள் 88 பேரும் எழுதுகிறார்கள். மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரத்து 606 பேர் எழுதுகின்றனர்.

இதையொட்டி தேர்வு மையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்கின. இந்த தேர்வுகள் மார்ச் 31-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. 

மொத்தம் 2,272 தேர்வு மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை அருகம்பாக்கம் அரசு பள்ளியில் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை எழும்பூர் அரசுப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். அவருடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உடன் சென்றார். கடந்த ஆண்டை விட இந்த ஆணடு 60 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதுகிறார்கள் என செங்கோட்டையன் கூறினார்.

 

 

Trending News