நாளை முதல் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் நாளை முதல் தொடங்கி மே 29-ம் தேதி வரை நீடிக்கிறது.  

Last Updated : May 3, 2019, 08:05 AM IST
நாளை முதல் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது title=

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் நாளை முதல் தொடங்கி மே 29-ம் தேதி வரை நீடிக்கிறது.  

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை முதல் தொடங்கிறது. இந்த அக்னி நட்சத்திரம் மே 29ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்திரி வெயிலின் காலத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வேலூர், சேலம், கரூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, பாளையங்கோட்டை போன்ற நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியது.

இந்த நிலையில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி 29-ம் தேதி வரை நீடிக்கிறது. இதனால் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

Trending News