வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் கனமழை பெய்யும்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 11, 2021, 04:18 PM IST
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் கனமழை பெய்யும் title=

 

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக மழைப் பெய்து வரும் நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில், ஆந்திரா, ஒடிசா இடையே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிக்லை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இது குறித்து கூறுகையில், “மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது” என்றார்.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் (Tamil Nadu) நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை (Heavy Rain) பெய்யும் எனவும், தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கன்னியாகுமரி,  திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இன்று மற்றும் நாளையும், தமிழகத்தின் கடலோரப்பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள்  மற்றும் ஆந்திர கடலோர பகுதிகள், குமரிக்கடல் மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ  வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மேலே குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

ALSO READ | Monsoon Alert: தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை எச்சரிக்கை

இன்று முதல் 13ம் தேதி வரை கர்நாடகா, கேரளா, கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில், தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். என்பதால், மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ALSO READ | Mekedatu Dam Issue: அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமிழக அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News