ஜெ.,வுக்கு பாரத ரத்னா- பிரதமரை இன்று சந்திக்கிறார் ஓ.பிஎஸ்

Last Updated : Dec 19, 2016, 09:32 AM IST
ஜெ.,வுக்கு பாரத ரத்னா- பிரதமரை இன்று சந்திக்கிறார் ஓ.பிஎஸ் title=

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைக்கவேண்டும் மற்றும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் இன்று முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் கோரிக்கை விடுப்பார் என்று தகவல் வெளியாகிள்ளது.

முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்திக்க இருக்கிறார். மறைந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு வெண்கலச் சிலை நிறுவ வேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கப்பட உள்ளதாம்.

இக்கோரிக்கைகளை கொடுத்துவிட்டு, இன்றேமுதல்வர் பன்னீர் செல்வம், சென்னை திரும்ப உள்ளார் என்று தகவல் தெரிவிக்கிறது.

Trending News