கோவை: 830 ஓட்டுகள் காணவில்லை, மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி மனு

Coimbatore, Goundampalayam, Vanathi Srinivasan: கோவை பாராளுமன்ற தொகுதியில் கவுண்டம்பாளையம் பகுதியில் 830 ஓட்டுகள் காணவில்லை. மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் நடத்த அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 19, 2024, 05:20 PM IST
  • கோவை கவுண்டம்பாளையத்தில் பூத்தில் 830 பெயர்கள் நீக்கம்
  • திடீரென போராட்டத்தில் குதித்த பாரதிய ஜனதா கட்சியினர்
  • மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் மனு
கோவை: 830 ஓட்டுகள் காணவில்லை, மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி மனு title=

லோக்சபா தேர்தல் 2024 

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது. பிறபகல் மூன்று மணி வரை அனைத்து மாவட்டங்களிலும் சராசரி வாக்குப்பதிவு ஒட்டுமொத்தமாக 50 விழுக்காட்டை கடந்துள்ளது. அதேநேரத்தில் சர்ச்சைகள் இல்லாமலும் இல்லை. தேர்தல் ஆணையம் வாக்களிக்க வரும் முதியோர்களுக்கு முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற புகார்கள் ஒருபுறம் இருக்க, வாக்காளர் பட்டியலில் இருந்து நடிகர் சூரி உள்ளிட்ட பல வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு எந்தவித காரணமும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததைக் கண்டித்து ஒரு சில இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. இதேபோல் கோவை, கவுண்டம்பாளையத்தில் 830 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் படிக்க | Actor Vijay: பேண்டேஜ் உடன் வாக்களித்த விஜய்... படப்பிடிப்பில் காயமா?

கோவையில் மறு வாக்குப்பதிவு நடத்த மனு

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அங்கப்பா பள்ளியில் பூத் எண் 214ல் 1353 ஓட்டு உள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 1353 ஓட்டுக்கள் இருந்த நிலையில் தற்போது வெறும் 523 ஓட்டுக்களே உள்ளன. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டனர். மேலும் இது ஒவ்வோரு வாக்காளர் எண்ணையும் மொபைலில் ஐடியை வைத்து செக் செய்தனர். அதில் அந்த எண்கள் இல்லை என்றே வந்தது. இது குறித்து தேர்தல் அகாரிகளிடமும் எடுத்துக் கூறப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலையில் உட்கார்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜகவினர் தெரிவித்தனர். 

பாஜகவினர் போராட்டம்

பாஜகவினரின் இந்த அறிவிப்பையடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியை அதிகப்படுத்தியுள்ளனர். ஒரு மணி நேரமாக எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்று கூறி பிஜேபி கட்சியினர் தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தை முடிவில் ஓட்டு போட அனுமதி மறுக்கப்பட்டவர்கள் அனைவரும் புகார் மனு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கொடுத்து இந்த பூத்தில் மறுவாக்கு பதிவு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மேலும் படிக்க | Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் தேர்தலை புறக்கணிக்கும் ‘சில’ கிராமங்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News